பராக்கா அணுமின் நிலையம் மீதான தாக்குதல் – ஐ.நா கண்டனம்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் மீது ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது. அதில் ஒரு ட்ரோன் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்கு வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




