வெனிசுலாவில் மற்றுமோர் நிலநடுக்கம் பதிவு
வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த புதன்கிழமை, 7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரங்களின்படி, அந்த நிலநடுக்கத்தால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் இருந்து 243 பேர் மீட்கப்பட்டதாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





