இந்தியா

பிரக்யான் ரோவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் சந்திரனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ‘பிரக்யான்’ ரோவர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரோவருக்கான திட்டமிடப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், அது உறக்கநிலையில் உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரக்யான் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு நேரம் தொடங்கியதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.  பிரக்யான் ரோவரின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு சூரிய சக்தி அவசியம்.

சந்திரனின் அடுத்த சூரிய உதயம் செப்டம்பர் 22 அன்று ஆரம்பமாகும். அதன் பிறகு பிரக்யானைப் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இருப்பினும், பிரக்யான் மீண்டும் செயல்படவில்லை என்றால், அது இந்தியாவின் நிலவு தரையிறக்கத்தின் பிரதிநிதியாக இந்தியர்களின் இதயங்களில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் இந்திய விண்வெளி அமைப்பு கூறுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே