யூத சமூகத்தைப் பாதுகாக்க கூடுதல் ஏற்பாடு – ஸ்டாமர் அறிவிப்பு!
யூத சமூகத்தைப் பாதுகாப்பதற்காகக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
டவுனிங் தெருவல் இடம்பெற்ற வட்டமேசை மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் யூத-எதிர்ப்பைத் தூண்டக்கூடிய ஒரு காரணியாக ஈரான் உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பிரிட்டிஷ் சமூகத்தில் வன்முறை, வெறுப்பு அல்லது பிளவுகளைத் தூண்டுவதற்கு ஈரான் அல்லது பிற நாடுகள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும், அவை விளைவுகளைச் சந்திக்கும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.
இந்தத் தீய அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்காகச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இது தேசியப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. என்றும் அவர் மேலும் கூறினார்.





