ஆப்பிரிக்கா முக்கிய செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் இராணுவ புரட்சி.. ஆட்சியை பிடித்ததாக அறிவிப்பு..

மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் இராணுவத்தினர் ஆட்சியை கைபற்றியுள்ளனர்.

புரட்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

தலைநகர் லிப்ரெவெல்லியில் ஆட்சி கவிழ்ப்பை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜனாதிபதி தேர்தலில் அலி போங்கோ 3-வது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் ராணுவத்தினர் ஆட்சியை பிடித்ததாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர்.

இதனிடையே வீட்டுக்காவலில் உள்ள அதிபர் போங்கோ உதவி கோரியுள்ளார். காபோன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு