ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மீது தூப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய 15வயது சிறுவன்!

அவுஸ்திரேலிய பாடசாலையில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடக்கு பெர்த்தில் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள அட்லாண்டிஸ் பீச் பாப்டிஸ்ட் பாடசாலையில் மற்றும் அதன் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் அப்பகுதியில் இருந்த கார்கள் மற்றும் பாடசாலை கட்டிடங்கள் சேதமடைந்தன. இதையடுத்து பாடசாலை நிர்வாகம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியது 15 வயது சிறுவன் என்றும், அவன் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பது கண்டறியப்பட்டது.

பின் சம்பந்தப்பட்ட சிறுவனை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.மேலும் சிறுவன் எதற்காக பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்றும் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content