18 ட்ரோன்களை இடைமறித்து அழித்தது சவூதி!
சவூதி அரேபியாவின் Saudi Arabia கிழக்குப்பகுதியில் ஊடுருவிய பதினெட்டு ஆளில்லா விமானங்களை drones வெற்றிகரமாகத் தடுத்து அழித்தாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதியை நோக்கி வான்வழித் தாக்குதல் முயற்சிகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
குறிப்பாக, ஷேபா எண்ணெய் வயலை இலக்கு வைத்துச் சென்ற ஒரு ட்ரோன் வடக்கு எல்லைப்பகுதியில் இடைமறித்துத் தகர்க்கப்பட்டது.
சவூதி பாதுகாப்புப் படைகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது நாட்டின் முக்கிய எரிசக்தி வளங்களைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியைக் காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வான்வெளி அச்சுறுத்தல்களை முறியடித்துத் தனது தேசிய பாதுகாப்பை நிலைநாட்ட சவூதி அரேபியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





