பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தளம் இடிந்து விழுந்து விபத்து – 03 பேர் பலி, பலர் மாயம்!
பிலிப்பைன்ஸில் வார இறுதியில் கட்டுமானத் தளம் ஒன்று இடிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பாங்காவின் (Pampanga) ஏஞ்சல்ஸ் நகரில் (Angeles City), இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மீட்பு பணியாளர்கள் இன்றைய தினம் இரண்டு பேரை மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும், மற்றொருவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தலைமையிலான நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர், மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]








