தென் கொரியாவில் 60 மீட்டர் உயர கோபுரம் இடிந்து விழுந்ததில் 3 பேர் மரணம்
3 dead after 60-meter tower collapses in South Korea
தென் கொரிய(South Korea) நகரமான உல்சானில்(Ulsan) உள்ள ஒரு அனல் மின் நிலையத்தில் 60 மீட்டர் (196 அடி) உயரமுள்ள ஒரு கோபுரத்தை இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உல்சானில் உள்ள பாய்லர்(boiler) கோபுரத்தில் ஒன்பது பேர் வேலை செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலையற்ற இடிபாடுகள் காரணமாக தேடல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உல்சானின் தீயணைப்புத் துறை அதிகாரி கிம் ஜியோங்-ஷிக்(Kim Jeong-shik) குறிப்பிட்டுள்ளார்.





