” எல்லாமே பொய்” – சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.தர்சினி இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பிள்ளையான் சிறைச்சாலை பஸ்சுக்குள் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்த […]













