உலகம் செய்தி

மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை: பாலஸ்தீனம் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள ஹுவாரா Huwara நகரில் இஸ்ரேலிய குடியேறிகளால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதலில் பல குடியிருப்பாளர்கள் காயமடைந்ததுடன், நகராட்சி கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்போடு இந்த அத்துமீறல்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டும் பாலஸ்தீனம், இது மக்களைத் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சி என்று குறிப்பிடுகிறது. காசா போரின் பின்னணியில் இத்தகைய ராணுவ மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் […]

இலங்கை

லொறியொன்று மரம் மீது மோதி விபத்து -12 பேர் படுகாயம்!!

  • June 6, 2026
  • 0 Comments

ஆனமடுவ பகுதியில் சரக்கு லொறியொன்று மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னருவவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முனேஸ்வரம் கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அந்த வாகனத்தில் 13 பேர் பயணம் செய்த நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பொலன்னருவவின் அரலகன்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை லொறி  […]

இலங்கை செய்தி

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் சுரேஷ் சலே!

  • June 6, 2026
  • 0 Comments

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் உதய கம்மன்பில மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். தடுப்புக்காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான, சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு முதல் சுரேஷ் சாலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். […]

ஐரோப்பா

நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அழைப்பு : புட்டின் நிராகரிப்பு!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில், அவரின் அழைப்பை புட்டின் நிராகரித்துள்ளார். அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனது கடிதத்தில், பெரும்பாலான ரஷ்யர்கள் உக்ரைனின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், அதிக பணவீக்கம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் சோர்வடைந்துவிட்டதாகவும், அமைதிக்குத் தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார். மேலும், போரைத் தொடர்வது புதினின் சொந்த நிலைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும், ரஷ்யா […]

உலகம்

ஈரானின் இராணுவத்தை அழித்ததாக ட்ரம்ப் பெருமிதம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஈரான் தனது அசல் ஏவுகணை ஆயுதக் கிடங்கில் “சுமார் 21 அல்லது 22 சதவிகிதத்தை” மட்டுமே தற்போதை வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே தனது வளைகுடா நட்பு நாடுகளை இலக்காகக் கொண்ட ஆறு ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஏவுகணை அதன் இலக்கை அடையத் தவறியதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி விளையாட்டு

ஈரான் அணி நிர்வாகிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

  • June 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில்   பங்கேற்கவுள்ள ஈரான் தேசிய கால்பந்து அணியின் முக்கிய பின்னணி நிர்வாகிகளுக்கு (Backroom staff) விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் வீரர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் உறுதிப்படுத்திய சில மணித்தியாலங்களிலேயே இந்த புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஜூன் 15ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ள ஈரானின் முதலாவது போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை […]

ஐரோப்பா

ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கு : கலவரங்களில் ஈடுபட்ட மேலும் 06 பேர் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கில் விக்ரம் திக்வாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் வன்முறையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பெயரில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கலவரம் தொடர்பாக இதுவரை  11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி புதிதாக கைது செய்யப்பட்ட 06 பேரும் இன்று சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். ஹென்றி நோவாக் இறக்கும் தருவாயில் இருந்தபோது அவருக்கு கைவிலங்கிடப்பட்ட சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

யாழ். சங்கவேலி கொலை: இரு சந்தேகநபர்கள் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அத்துடன், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்து, சங்குவேலியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த 67 வயதுடைய முதியவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் […]

இலங்கை

தோல்வி பயம் : மாகாணசபை தேர்தல் விடயத்தில் சஜித் குற்றச்சாட்டு!

  • June 6, 2026
  • 0 Comments

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் பீதியடைந்துள்ள ஆளும் அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அரசாங்கம் தற்போது பொதுமக்களை எதிர்கொள்ளத் தயக்கம் காட்டுவதாகவும், அதன் விளைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் நிலவுவதாகவும் பிரேமதாச சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தலுக்கும் அதனைத் […]

உலகம்

தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தீவுகளில் சீனா அத்துமீறல்!

  • June 6, 2026
  • 0 Comments

தென் சீனக் கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், சீனாவின் கடலோர காவல் கப்பல் ஒன்றும், ஆய்வு கப்பல் ஒன்றும் இன்று  ரோந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளில் சீனா தொடர்ந்து அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெற்கு தைவானுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் உள்ள இந்தத் தீவுகள், தைவான் தீவிலிருந்து 400 கி.மீற்றருக்கும் (250 மைல்கள்)  அதிகமான தூரத்தில் இருப்பதால், சீனத் தாக்குதலுக்கு எளிதில் […]