ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கு : கலவரங்களில் ஈடுபட்ட மேலும் 06 பேர் கைது!
ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கில் விக்ரம் திக்வாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் வன்முறையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பெயரில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கலவரம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி புதிதாக கைது செய்யப்பட்ட 06 பேரும் இன்று சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
ஹென்றி நோவாக் இறக்கும் தருவாயில் இருந்தபோது அவருக்கு கைவிலங்கிடப்பட்ட சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




