உலகம் செய்தி

மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை: பாலஸ்தீனம் கடும் கண்டனம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள ஹுவாரா Huwara நகரில் இஸ்ரேலிய குடியேறிகளால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பல குடியிருப்பாளர்கள் காயமடைந்ததுடன், நகராட்சி கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்போடு இந்த அத்துமீறல்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டும் பாலஸ்தீனம், இது மக்களைத் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சி என்று குறிப்பிடுகிறது.

காசா போரின் பின்னணியில் இத்தகைய ராணுவ மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதனை ஒரு திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையாகக் கருதித் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதோடு இப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாகத் தெரிகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி