உலகம்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கலவரம் – 24 பேர் உயிரிழப்பு

  • June 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் கலவரம் வெடித்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் முழு அடைப்பு அமுலில் உள்ள  நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடித்த இந்தப் போராட்டங்களில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் அதிகாரிகளுக்கும், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JAAC) ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் இஸ்லாமாபாத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எழும் எதிர்ப்புகளை டெல்லி கையாளும் விதத்தை […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ விமானம் விடைபெற்றது

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்திய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) போயிங் VC-25A விமானம் தனது சேவையை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை ஆற்றிய  இந்த விமானம் தற்போது தனது இறுதி பயணத்தை நிறைவு  செய்துள்ளதாக  ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சி மாநாட்டிற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட பயணமே இந்த விமானத்தின் இறுதிப் பறப்பாக பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. செய்தி விளையாட்டு

ஜனாதிபதியை சந்தித்தார் ICC தலைவர்

  • June 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் சபையை நிர்வகிக்க அரசு தற்காலிகக் குழுவை நியமித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஏற்கனவே தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, காலதாமதமின்றி ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பு […]

உலகம்

எபோலா வைரஸ் – காங்கோவில் 75 சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு

  • June 19, 2026
  • 0 Comments

காங்கோ குடியரசில் எபோலா நோய் பரவல் தொடங்கியதிலிருந்து 75 சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எபோலா நோய் தொற்று குறித்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னமே நோய் தொற்று பரவியிருக்கலாம் எனத் அதிகாரிகள்  சந்தேகிக்கின்றனர். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையிலும்கூட, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பின்படி, உலகில் மிகக் குறைந்த சுகாதாரப் பணியாளர் விகிதங்களைக் கொண்ட […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு: யாழில் இன்றும் போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமையும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பாரம்பரியக் குடியிருப்புகளையும் வாழ்வாதாரக் காணிகளையும் தமக்கு உடனே திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • June 19, 2026
  • 0 Comments

  நாட்டின் குடிவரவுச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சீர்திருத்தங்கள், கல்வித் துறையிலும் சர்வதேச மாணவர்களின் எதிர்காலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. கல்விக்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான மாற்றம், பட்டதாரி விசாவின் கால அளவில் செய்யப்பட்டுள்ளது. 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் தங்கள் படிப்புக்குப் பிறகு பணிபுரிய விண்ணப்பிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இரண்டு வருட கால […]

தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று கரை ஒதுங்கிய யாழ்.மீனவரின் சடலம் இலங்கை செய்தி

காணாமல்போன யாழ்.மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று (19) சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளது. நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி கடலுக்குச் சென்ற சமயம், எதிர்பாராதவிதமாகக் கடலில் தவறி விழுந்து காணாமல்போனார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை […]

செம்மணியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர். இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ – 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று மாலை நேரில் வருகை தரவுள்ளனர். அமைச்சரின் […]

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் ஹர்லி உலகம்

ஜப்பானில் பாடசாலையொன்றில் தீவிபத்து

  • June 19, 2026
  • 0 Comments

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் காயமடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாடசாலைக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து  300 மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அறிவிகக்ப்பட்டுள்ளது.

உலகம்

அமெரிக்க-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? வெளியான காரணம்

  • June 19, 2026
  • 0 Comments

லெபனான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததன் காரணமாக, இன்று காலை நிலவரப்படி மேலும் 16 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இஸ்ரேலிய நடவடிக்கைகள் காரணமாக ஈரானிய தூதுக்குழுவால் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சக வட்டாரங்களின்படி, தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பாகிர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட முழுமையாகத் தயாராக இருந்தனர். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காரணமாக, ஈரானிய தூதுக்குழுவின் பயணம் கடைசி […]