அரசியல் இலங்கை செய்தி

” தேர்தலை பிற்போட அரசு முற்படவில்லை” – அமைச்சர் விளக்கம்!

  • May 29, 2026
  • 0 Comments

“மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.” – அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தப்போது […]

இந்தியா செய்தி

அமுலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய 8 பேர் கைது!

  • May 29, 2026
  • 0 Comments

கேரளாவில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் பயணித்த வாகனம்மீது தாக்குதல் நடத்தினர் எனக் கூறப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமுலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதனால் கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ,அமுலாக்கத் துறை அதிகாரிகள் வந்த வாகனங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

“ஏனைய கட்சிகளை உடைக்கும் எண்ணம் இல்லை” – நாமல்

  • May 29, 2026
  • 0 Comments

” ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன் இணைத்து, எதிர்க்கட்சி தலைவர் ஆகும் திட்டம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” ஒரு கட்சியை உடைத்து, எமது கட்சியை வலுப்படுத்துவதற்குரிய திட்டம் இல்லை. அவ்வாறு செயற்பட்டதால் […]

ஐரோப்பா செய்தி

ஆப்கானிஸ்தானில் கொடூரம்: பிரித்தானிய சிறப்பு படையின் மறுபக்கம் அம்பலம்!

  • May 29, 2026
  • 0 Comments

2010 – 2013 காலப்பகுதியில்ஆப்கானிஸ்தானில் , பிரித்தானிய சிறப்புப் படையினரால் (SAS) பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம், அப்போதைய ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை கடும் அதிருப்தியடையச் செய்திருந்ததாக லண்டனில் நடைபெற்று வரும் பொது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது. தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த நேட்டோ (NATO) தளபதிகளிடம், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கர்சாய் மிகவும் கடுமையான முறையில் தனது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய சிறப்புப் படையினர் மேற்கொண்ட […]

உலகம்

அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்த இஸ்ரேல்!

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தடுப்பு மையங்களில் இருந்த பாலஸ்தீன கைதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாடடுகள் காரணமாக  கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தூதர்  டேனி டானன் (Danny Danon ) இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஷ இஸ்ரேலைக் கறுப்புப் […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக்கிண்ணம்: ஈரான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் இழுபறி!

  • May 29, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நெருங்கி வரும் வேளையில், ஈரானிய தேசிய அணி வீரர்கள் அமெரிக்காவிற்குச் செல்வதற்கான நுழைவு விசா (Visa) கிடைப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பயண ஆவணங்கள் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, ஈரான் அணி மற்ற நாடுகளைப் போல சமமான வாய்ப்புகளுடன் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று மெக்சிகோவிற்கான ஈரானிய தூதர் குற்றம் சாட்டியுள்ளார். திட்டமிட்டபடி அரிசோனாவில் பயிற்சியைத் தொடங்க முடியாததால், வீரர்கள் தற்போது தற்காலிகமாக மெக்சிகோ எல்லையில் முகாமிட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?

  • May 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன. ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் இரு நாடுகளும் வியாழக்கிழமை உடன்பாட்டை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த உடன்பாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

படகு கவிழ்த்து அதிபர் பலி: யாழில் சோகம்!

  • May 29, 2026
  • 0 Comments

யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், அண்மையில்தான் புங்குடுதீவிலிருந்து இடமாற்றம் பெற்று நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். சம்பவ தினமான […]

செய்தி விளையாட்டு

இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது?

  • May 29, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று (29) நடைபெறும் 2 வது தகுதிச்சுற்று (Qualifier 2) ஆட்டத்தில் ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகார் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மே 27 ஆம் […]

இலங்கை

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!! வர்தமானி வெளியீடு!

  • May 28, 2026
  • 0 Comments

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய வர்த்தமானி  அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க பொது மக்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார். 15 அத்தியாவசிய சேவைகளின் விபரங்கள் வருமாறு, 01. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்.  02.பெற்றோலிய பொருட்கள் […]