அரசியல் இலங்கை செய்தி

“ஏனைய கட்சிகளை உடைக்கும் எண்ணம் இல்லை” – நாமல்

” ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.” என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன் இணைத்து, எதிர்க்கட்சி தலைவர் ஆகும் திட்டம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” ஒரு கட்சியை உடைத்து, எமது கட்சியை வலுப்படுத்துவதற்குரிய திட்டம் இல்லை. அவ்வாறு செயற்பட்டதால் கடந்த காலங்களில் துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது. வாக்கு வங்கி 3 சதவீதமாக சரிந்தது.

எனினும், எமது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறும். அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.’ – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!