மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி விஷமருந்தி தற்கொலை முயற்சி: நுவரெலியாவில் பரபரப்பு!
நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) நண்பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற இலக்கமுடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, சந்தேக நபரான உடபுஸ்ஸல்லாவ, தொடம்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் குற்றம் புரிந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின், அவருக்கு மரண தண்டனை […]













