ஐரோப்பா செய்தி

புதிய மசோதாக்கள் கொண்டு வரப்படும் – மன்னரின் விசேட அறிவிப்பு

  • May 13, 2026
  • 0 Comments

அரசு பொதுச் சேவைகள் மற்றும் கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அடுத்த ஓராண்டுக்கான அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் மற்றும் சட்ட முன்னுரிமைகளை விளக்கும் தனது உரையிலேயே அவர் இதனைக் கூறினார். அரசின் செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த பின்னர், அமைச்சர்கள் அறிமுகப்படுத்த உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். அதில் முதன்மையாக, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. “பிரித்தானியாவின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், […]

செய்தி தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்

  • May 13, 2026
  • 0 Comments

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய தேர்வு முகமை நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2026 மே 3ஆம் திகதி நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் தேர்வு நடைபெற்றதுடன், சுமார் 1.4 இலட்சம் தமிழக மாணவர்கள் உட்பட மொத்தம் 22,05,035 பேர் இதில் பங்கேற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வினாத்தாள் […]

கருத்து & பகுப்பாய்வு

உலகின் முதல் இறகுகள் கொண்ட டைனோசர்கள் – சீனாவில் கண்டுப்பிடிப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

1996-ல் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான புதைபடிவத்தின் மூலம், விஞ்ஞானிகள் டைனோசர்களைப் பற்றிய தங்கள் சிந்தனை முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளனர். இந்தப் புதைபடிவம், இறகுகள் கொண்ட டைனோசருக்கான உலகின் முதல் உறுதியான சான்று என்று கூறப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பு, சில தொல்லுயிரியலாளர்கள் பறவைகள் டைனோசர்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்று ஊகித்திருந்தனர். ஆனால், போதுமான சான்றுகள் இல்லாததால் இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்தது. இருப்பினும், இந்த சீனப் புதைபடிவத்தின் கண்டுபிடிப்பால், டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தன […]

இலங்கை செய்தி

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

  • May 13, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில், உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி […]

இந்தியா

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா

  • May 13, 2026
  • 0 Comments

ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும், 06 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஒகஸ்ட் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, […]

இலங்கை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி – நந்தலால் வீரசிங்க வழங்கிய உறுதிமொழி!

  • May 13, 2026
  • 0 Comments

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட மோசடி சம்பவத்தை தொடர்ந்து அவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கியும் (CBSL) நிதி அமைச்சகமும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற […]

இலங்கை செய்தி

பொலிஸாரை கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞன்: யாழில் சம்பவம்!

  • May 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, பொலிஸாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது கையில் வைத்திருந்த ஹெரோயின் பொட்டலத்தை வாய்க்குள் போட்டுத் […]

உலகம் செய்தி

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 2000 இற்கும் மேற்பட்டோர் பலி

  • May 13, 2026
  • 0 Comments

லெபனான் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 2,896 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 2ஆம் திகதி முதல் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே தாக்குதல்களில் 8,824 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை […]

இந்தியா செய்தி

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ -க்கள் பதவி பறிபோகிறதா?

  • May 13, 2026
  • 0 Comments

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை மீறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சிக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு காணப்படுவதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சட்ட நிபுணர்களின் விளக்கப்படி, கட்சி தாவலை தடுக்கும் நோக்கில் 1985ஆம் ஆண்டு 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 10வது அட்டவணை சேர்க்கப்பட்டது. இதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாகவே தனது கட்சியிலிருந்து விலகினால் அல்லது […]

ஐரோப்பா செய்தி

அரசாங்கம் வலுவான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் – மன்னர் நம்பிக்கை

  • May 13, 2026
  • 0 Comments

உலகம் தற்போது அதிகரித்து வரும் அபாயகரமான மற்றும் நிலையற்ற சூழலில் இருப்பதாக மன்னர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார அமைப்புகள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகும் நிலையில்,  அரசு அதற்கு வலிமையுடன் பதிலளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் உள்ளிட்ட உலகளாவிய பதற்றங்களை சுட்டிக்காட்டிய அவர் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் காக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்று கூறினார். இதேவேளை, யூத-எதிர்ப்பை எதிர்க்கவும் அனைத்து சமூகங்களும் […]