இந்தியா செய்தி

ஐ.நாவின் செயல்திறன் சரிந்துவிடும்: இந்தியா எச்சரிக்கை!

  • May 15, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபையை மறுசீரமைப்பதற்குரிய காலம் கடந்துவிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாதுகாப்பு சபை உட்பட ஐநாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற […]

இலங்கை செய்தி

வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்தில் ஊழல்: யாழில் போராட்டம்!

  • May 15, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களைக் கண்டித்து, யாழ். ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், “வடக்கு மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசும், ஊழல் கல்வி அதிகாரிகளும் […]

ஐரோப்பா

மற்றுமொரு நேட்டோ நாடு மீதும் குறி : துருப்புக்களை அனுப்ப மறுப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

போலந்திற்கு 4,000 அமெரிக்கப் படைகளை அனுப்பும் முடிவை பென்டகன் மாற்றியமைத்துள்ளது. நேட்டோவில் எழுந்துள்ள விரிசல் நிலை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பை பென்டகன் குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது போலந்திற்கான இராணுவத்தை அனுப்புவதிலும் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. ஈரான் போர் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவை  இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். பென்டகன் இது […]

ஐரோப்பா

இரவோடு இரவாக மோதிக்கொண்ட உக்ரைன் – ரஷ்யா : பற்றி எரிந்த ஆலை!

  • May 15, 2026
  • 0 Comments

உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து  ரியாசானில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதளில் ரியாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமைடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரேனின் ஆளில்லா விமானப் படைத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi) மேற்படி தாக்குதலை உறுதிப்படுத்தினார். அதேநேரம் உக்ரேனில் உள்ள  23 இராணுவ இலக்குகள் மற்றும் வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே 355 […]

ஐரோப்பா

பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் சேவை நிறுத்தம்!

  • May 15, 2026
  • 0 Comments

பின்லாந்தின் ஹெல்சிங்கி (Helsinki) விமான நிலையத்தில் இன்று வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்லாந்தின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் பறப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo)  அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர், உள்துறை அமைச்சர் மாரி ரந்தனென் (Mari Rantanen), ஆபத்து நீங்கிவிட்டதாகவும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!

  • May 15, 2026
  • 0 Comments

காங்கோவின்  இடுரி (Ituri) மாகாணத்தில் ஒரு புதிய எபோலா பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பரவலால் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காங்கோவின் முந்தைய எபோலா தொற்றுநோய் முடிவடைந்து 05 மாதங்களுக்கு பிறகு  தொற்றுபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 1976-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஏற்படும் 17-வது வைரஸ் பரவல் இதுவாகும். எபோலா என்பது உடல் திரவங்கள் மூலம் பரவும், எளிதில் தொற்றக்கூடிய மற்றும் […]

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு! அவசரகால எச்சரிக்கை!!

  • May 15, 2026
  • 0 Comments

ஜப்பானின் மியாகி பிராந்தியத்தின் கடற்கரைக்கு அப்பால் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஐந்து மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஜப்பானிய அதிகாரிகள், தங்களின் 1-7 வரையிலான தீவிர அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தை 05 இல் அடங்குவதாக வரையறுத்துள்ளனர். வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், சுனாமிக்கான உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஐரோப்பா

லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு – 11 பேர் தடைப்பட்டியலில்!

  • May 15, 2026
  • 0 Comments

மத்திய லண்டனில் டாமி ராபின்சன் ( Tommy Robinson) தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக வெளிநாடுகளில் உள்ள 11 “தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள்”   நாட்டிற்குள் நுழைவதை இங்கிலாந்து அரசாங்கம் தடை செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதித்துள்ளதுடன், அத்தகைய நபர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகவும் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார். தடை செய்யப்பட்டதாகக் கூறும் நபர்களில் […]

உலகம்

சீனாவில் 250 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு – ஏராளமானோர் வெளியேற்றம்!

  • May 15, 2026
  • 0 Comments

கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் நகரம் ஒன்றில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷ குவாங்சி ( Guangxi) பிராந்தியத்தில் அமைந்துள்ள கின்சோ நகரம் (Qinzhou ), குறிப்பிடத்தக்க பாதிப்புகளைச் சந்தித்துள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்க, மீட்புக் குழுவினர் காற்றடைக்கப்பட்ட படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதேவேளை கின்சோ நகரில் அதிகபட்சமாக 250 மில்லிமீற்றர் மழைப்பொழிவு பதிவாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏப்ரல் மாத இறுதியில் இதுபோன்ற கனமழையைக் […]

இந்தியா செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடன் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 15, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று முக்கியமான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான அரசமுறை பயணத்தை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்தார். இதற்கமைய முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு சந்திப்பின் முடிவில் […]