ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு! அவசரகால எச்சரிக்கை!!
ஜப்பானின் மியாகி பிராந்தியத்தின் கடற்கரைக்கு அப்பால் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஐந்து மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஜப்பானிய அதிகாரிகள், தங்களின் 1-7 வரையிலான தீவிர அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தை 05 இல் அடங்குவதாக வரையறுத்துள்ளனர்.
வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், சுனாமிக்கான உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.





