சீனாவில் 250 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு – ஏராளமானோர் வெளியேற்றம்!
கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் நகரம் ஒன்றில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷ
குவாங்சி ( Guangxi) பிராந்தியத்தில் அமைந்துள்ள கின்சோ நகரம் (Qinzhou ), குறிப்பிடத்தக்க பாதிப்புகளைச் சந்தித்துள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்க, மீட்புக் குழுவினர் காற்றடைக்கப்பட்ட படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதேவேளை கின்சோ நகரில் அதிகபட்சமாக 250 மில்லிமீற்றர் மழைப்பொழிவு பதிவாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏப்ரல் மாத இறுதியில் இதுபோன்ற கனமழையைக் காண்பது அரிது என்று வானிலை ஆய்வாளர் லின் நான் (Lin Nan ) தெரிவித்துள்ளார்.




