உலகம்

சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை : தவிடுபொடியாகும் வல்லரசு கனவு!

  • May 26, 2026
  • 0 Comments

சீனாவில் தற்போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் பணியகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த மைல்கல்லை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள்தொகை சரிவை மாற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சீனாவின் ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகையில், குறைந்தது 15.87 சதவீதத்தினர் 65 […]

உலகம்

எபோலா தொற்று பற்றிய போதிய தெளிவின்மை : கட்டுப்படுத்துவதில் சிரமம்!

  • May 26, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் மையப் பகுதியில் வாழும் மக்கள்  எபோலா வைரஸ் பற்றிய போதிய விளக்கத்தை கொண்டிராதமையால் நோயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ActionAid DRC நடத்திய மதிப்பாய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்களில் 64 சதவீதம் பேர் மட்டுமே எபோலா உண்மையானது என நம்புவதாக தெரியவந்துள்ளது. ஏனையோர் அதனை பொய்யாக கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே குறித்த வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 200இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் […]

ஐரோப்பா

இங்கிலாந்தை உலுக்கும் வெப்ப அலை : 04 சிறுவர்கள் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில் 34.8°C என்ற மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் 36°C  வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவ்வாறு நீரில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

ஹொங்கொங் சென்ற விமானத்தில் நெருக்கடி நிலை!! 10 பேர் காயம்!

  • May 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற விமானமொன்று கடுமையான காற்றழுத்தச் சீர்குலைவிற்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் 10 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 240 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய ஏர்பஸ் A350-900 ரக விமானமான CX156 என்ற விமானமே மேற்படி அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு பயணிகள் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பழமையான மின்கட்டமைப்பை திருத்த முன்மொழிவு!

  • May 26, 2026
  • 0 Comments

பழமையான மின் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு  ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. இதற்கு சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம், மற்ற நாடுகள் அத்தகைய ஏற்பாட்டைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று  கேட்டுக்கொண்டுள்ளன. புதிய எரிசக்தி திட்டங்களுக்கான  ஒப்புதலை பெறுவதென்பது,   அரசியல் ரீதியாக மிகவும் பதற்றமூட்டும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது. மின்கட்டமைப்புத் தொகுப்பின் கீழ் உள்ள சட்ட உரைகள், “அனுமதி வழங்கும் நடைமுறைகள் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்குத் தடையா? சிஐடியில் முறைப்பாடு!

  • May 26, 2026
  • 0 Comments

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு – […]

ஐரோப்பா

பிரான்சில் கடும் வெப்பம் – எழுவர் உயிரிழப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

பிரான்சில் கடும் வெப்பம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பா மற்றும் போர்ச்சுகளில்  வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பிரான்சில் உயிரிழந்தவர்களில், கடும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீச்சல் குளங்களில் குதித்த பலரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இங்கிலாந்திலும் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று (25) பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

‘படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும்’ – யாழில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை!

  • May 26, 2026
  • 0 Comments

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை […]

உலகம்

தென்கொரியாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து – மூவர் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

தென் கொரியத் தலைநகரான சியோலில் பழமையான மேம்பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 03 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமைவாய்ந்த சியோசோமுன் (Seosomun)  மேம்பாலத்தை இடிப்பதற்காக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

விரைவில் மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு , “தேர்தலுக்கான நிதி […]