ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளைஞர்களுக்கான சமூக ஊடக தடை– பொதுமக்களிடம் ஆலோசனை கோரும் அரசாங்கம்

  • March 2, 2026
  • 0 Comments

இளைஞர்களை சமூக ஊடகங்களில் பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஆலோசனையை பிரித்தானிய அரசு இன்று ஆரம்பித்துள்ளது. இதன்போது 16 வயதுக்குட்பட்டவர்களை டிக்டொக், ஸ்னாப்செட், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்து தடை செய்யவது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேர சமூக ஊடக உபயோகத்தை கட்டுப்படுத்தல், முடிவற்ற ஸ்க்ரோல் மற்றும் ஒட்டோப்ளே போன்ற அம்சங்களுக்கு கட்டுப்பாடு, குழந்தைகள் செட்போட்களைப் (chatbot) பயன்படுத்துவதைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் சமூக […]

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

“ அமெரிக்காவுடன் ஈரான் பேச்சு நடத்தாது. தன்னைதானே தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது.”என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் அலி லாரிஜானி Ali Larijani தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கம் ஊடாகவே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘‘டொனால்ட் ட்ரம்ப் தனது தவறான நம்பிக்கைகளால் பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க படையினர் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். […]

இலங்கை

மஹ்மூத் அஹ்மதிநெஜாடின் மரணம் : அதிர்ச்சியில் நாமல் ராஜபக்ஷ!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ( Mahmoud Ahmadinejad) விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், அஹ்மதிநெஜாட்டின் படுகொலையைக் கேட்டு “அதிர்ச்சியடைந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னாள் ஈரானியத் தலைவரின் பங்கை நினைவு கூர்ந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் […]

உலகம்

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் : 555 பேர் உயிரிழப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தெற்கு ஈரானில் உள்ள ஒரு பெண்கள் படசாலையில் குறைந்தது 165 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தி, போர் விரிவடைந்து வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா தரப்பிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் தரப்பில் இருந்து 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம்

குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விபத்து!

  • March 2, 2026
  • 0 Comments

குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது. குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெட் விமானங்களின் பணியாளர்கள் “காயமின்றி உயிர் பிழைத்தனர்” என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக 3 ஐரோப்பிய நாடுகள் களத்தில்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் நடத்திவரும் ஏவகணைத் தாக்குதல்களை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. மேற்படிதாக்குதல்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பியத் தலைவர்கள், பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன், கட்டாரை நோக்கி பாய்ந்த ஈரானின் ஏவகணையொன்றை பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

உலகம்

லெபனான்மீதும் கை வைத்தது இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் Israel தற்போது லெபனான்மீதும் Lebanon தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்படுகின்றது. அவ்வமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற ஆயதபடையென கருதப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள்மீதான தாக்குதல் […]

இலங்கை செய்தி

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசு விளக்கம்!

  • March 2, 2026
  • 0 Comments

நாட்டில் தேவையானளவு எரிபொருள் உள்ளது. எனவே, தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வீண் அச்சத்தால் மக்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு அச்சம் கொள்ள தேவை இல்லை. தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது. எமது கப்பல்கள் மத்திய கிழக்கு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துமாறு இலங்கை அழைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என அனைத்து தரப்புகளிடமும் கோருகின்றோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர், “ எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. போரால் உயிரிழப்புகளும், […]

உலகம்

போருக்குள் நுழையும் வளைகுடா நாடுகள்: பகிரங்க எச்சரிக்கை!

  • March 2, 2026
  • 0 Comments

  ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் […]