ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் போர் நடவடிக்கை தீவிரமடைந்தால் பிரித்தானியாவுக்கு பெரும் சவால்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், அது பிரித்தானியாவுக்கு புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சைப்ரஸில் அமைந்துள்ள பிரித்தானிய ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri) அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இந்தநிலையில் மத்திய கிழக்கில் பிரித்தானிய படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கட்டாருக்கு டைபூன் (Typhoon) போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரியிலிருந்து ஆறு F-35 போர் விமானங்களும் […]

இலங்கை செய்தி

தமிழர் பிரச்சினை குறித்து கேட்டறிந்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்

  • March 3, 2026
  • 0 Comments

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்குக்கும் Andreas Gravik, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் M.A. Sumanthiran, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் Chanakyan ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. போருக்குப் […]

இலங்கை

முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

  • March 3, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும் சமூக மட்டத்திலும் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]

அரசியல் இலங்கை செய்தி

ஈரான்மீதான தாக்குதல் ஐ.நா. சாசனத்தை மீறும் செயல்: சபையில் சஜித் கண்டனம்!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலானது ஐ.நா. சாசனத்தைமீறும் செயலாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவர் Opposition Leader சஜித் பிரேமதாச Sajith Premadasa. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அதேபோல ஐக்கிய அரபு அமீகரம், சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள்மீது ஈரான் நடத்திய தாக்குதலையும் கண்டிக்கின்றோம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் எமது நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட […]

இலங்கை செய்தி

ஈரானின் ஒருமைப்பாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பு: ரிஷாத்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குத் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றது. இது ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் […]

செய்தி

பிரதம நீதியரசர் முல்லைத்தீவு விஜயம்!

  • March 3, 2026
  • 0 Comments

பிரதம நீதியரசர் Chief Justice பிரீத்தி பத்மன் சூரசேன, Preethi Padman Surasena நேற்று (03) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டார். அத்துடன், சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். நீதிச்சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

உலகம்

ஈரானில் மோதலுக்கு மத்தியில் பதிவான நிலநடுக்கம்!

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் இன்று 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிராக நடந்து வரும் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விளையாட்டு

வடக்கின் போர் மார்ச் 05 ஆம் திகதி ஆரம்பம்!

  • March 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நாளை மறுதினம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த துடுப்பாட்ட போட்டி 119 வது முறையாக நடத்தப்படுகின்றது. போட்டியானது மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் […]

இலங்கை செய்தி

ஈரான் உச்ச தலைவர் மறைவு: சம்பாந்துறையில் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச […]