உலகம்

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் யார்? : பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அந்த பதவியை ஈடு செய்ய அவருடைய மகனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பான மூத்த மதகுருமார்கள் இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். தற்போதைய சூழலில் அடுத்த தலைவரின் பெயர் அறிவிக்கப்பட்டால் அவர் இஸ்ரேலிய துருப்புகளின் இலக்காக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக அந்த விடயங்கள் இரகசியம் காக்கப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய ஈரானின் அடுத்த […]

இலங்கை

மின்மாற்றியில் தீ விபத்து – களுத்துறையில் சம்பவம்!

  • March 4, 2026
  • 0 Comments

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒரு மின்மாற்றியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் மின்மாற்றி அலகு பகுதியளவு சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறை நகராட்சி மன்ற தீயணைப்பு படை மற்றும் லங்கா மின்சார நிறுவனத்தின் (LECO) ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உலகம்

கனடா தனது இராணுவ பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் – பென்டகன் அதிகாரி வலியுறுத்து!

  • March 4, 2026
  • 0 Comments

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளைக்குள் (NORAD) நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட கனடா தனது இராணுவ பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புகழ்பெற்ற இராணுவ வரலாறு இருந்தபோதிலும், பனிப்போருக்குப் பிறகு கனடாவின் ஆயுதப்படைகள் குறைந்துவிட்டதாக கொள்கைக்கான பாதுகாப்பு துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby) சுட்டிக்காட்டியுள்ளார். NORAD இன் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சாத்தியமான கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் குறித்து அமெரிக்க […]

உலகம்

வளர்ந்து வரும் மோதல்களால் அடிமேல் அடிவாங்கும் பொருளாதாரம் – IMF கவலை!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைகளை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிராந்தியத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, […]

விளையாட்டு

அரை இறுதிச் சுற்று இன்று ஆரம்பம்: நியூசிலாந்து. தென்னாபிரிக்கா மோதல்!

  • March 4, 2026
  • 0 Comments

ICC T20உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்னாபிரிக்காSouth Africa – நியூசிலாந்து New Zealand அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன. கொல்​கத்தா ஈடன் கார்​டன் Eden Gardens மைதானத்​தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென்னாபிரிக்கா அணி நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 […]

அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு பதற்ற நிலை விரைவில் சீராகும்: இலங்கை நம்பிக்கை!

  • March 4, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவில் சீராகும் என நம்புகின்றோம். சிலவேளை நீடித்தால்கூட அதனால் மீனவர்களுக்கு தாக்கம் ஏற்படடாத வகையில் உரிய தலையீடு மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு கடற்றொழில், நீரில் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, “ ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்பின்னரும் நெருக்கடி ஏற்பட்டால் மீனவர்களுக்கு […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானை எதிர்க்கிறது ஆஸ்திரேலியா: மத்திய கிழக்கில் 6 குழுக்கள் களமிறக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரில் ஆஸ்திரேலியா நேரில் பங்கேற்காவிட்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே அந்நாட்டு அரசாங்கம் உள்ளது. ஈரான் உச்ச தலைவரின் மரணத்துக்குகூட ஆஸ்திரேலியா அனுதாபம் தெரிவிக்கவில்லை. அதேபோல உச்ச தலைவருக்கு சில மசூதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் வகையில் ஆறு அவசரகால உதவிக் குழுக்களை அந்நாட்டு அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து முடக்கத்தால் […]

இலங்கை செய்தி

வடக்கில் கண்ணிவெடி அகற்றல்: நோர்வேயின் ஒத்துழைப்புக்கு சஜித் நன்றி தெரிவிப்பு!

  • March 4, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa மற்றும் இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Gravic ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்புநேற்று (03) பிற்பகல் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயங்கள் முன்வைக்கப்பட்டன. டித்வா சூறாவளிப் பாதிப்பின் போது CERF, WFP மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக நோர்வே வழங்கிய 24 மில்லியன் நோர்வே குரோனர் (NOK) மதிப்பிலான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கை நாடாளுமன்றில் இரு நாள் விவாதம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் Sajith Premadasa கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (03) ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் உரையாற்றுகையிலேயே Sajith Premadasa ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அவசியம். இதற்கான அழைப்பை கட்சி பேதமின்றி அனைத்து தரப்புகளுக்கும் […]

உலகம் செய்தி

ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய வளாகங்களில் தாக்குதல்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில், ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய வளாகங்களில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அத்துடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி ஆறு அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை ஈரானின் பதிலடி தாக்குதல் நடவடிக்கை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் லெபனானில் […]