இலங்கைக்கு நேசக்கரம் நீட்ட ஆஸ்திரேலியா தயார்!
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலியா வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டிலும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் […]













