ஐரோப்பா செய்தி

பெல்ஜியத்தில் ட்ரோன் ஊடுருவல்கள் அதிகரிப்பு – களமிறங்கும் பிரித்தானியா!

  • November 9, 2025
  • 0 Comments

பெல்ஜியத்தில் (Belgium) ட்ரோன் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அந்நாட்டின் வான் பரப்பை பாதுகாக்க இங்கிலாந்து உதவுவதாக அறிவித்துள்ளது. பெல்ஜியத்தின் ஜுவாண்டெம் (Zavantem)   விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவ்விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து வான் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இங்கிலாந்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. இதற்கமைய பாதுபாப்பு செயலாளர்  ஜான் ஹீலியுடன்  (John Healey)  கலந்தாலோசித்த இராணுவ தலைவர்  சர் ரிச்சர்ட் நைட்டன் (Sir Richard Knighton) பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி பெல்ஜியத்திற்கு  […]

உலகம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • November 9, 2025
  • 0 Comments

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்  இன்று வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்துள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம், 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

தாய்லாந்து – மலேசியா எல்லைக்கு அருகே படகு விபத்து : பலர் மாயம்!

  • November 9, 2025
  • 0 Comments

தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே உள்ள கடற்பகுதியில் இன்று படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில்  நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் பயணித்த 10 பேர் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது. மியன்மாரின் புதிடாங்கிலிருந்து (Buthidaung) சுமார் 300 பேருடன் புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்பிழைத்தவர்களில் மூன்று மியன்மார் ஆண்கள் மற்றும் இரண்டு ரோஹிங்கியா ஆண்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் […]

ஐரோப்பா செய்தி

UKவில் ஆதரவு கொடுப்பனவை கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் வேலை செய்யாமலோ அல்லது படிக்காமலோ இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் சுயாதீன மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் சுகாதார செயலாளர் ஆலன் மில்பர்ன் (Alan Milburn) இந்த பணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 -24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கல்வி அல்லது வேலையில் இருந்து வெளியேறுவது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் பாட் மெக்ஃபேடன் (Pat McFadden) வலியுறுத்தியுள்ளார். […]

பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை யாருக்கு தெரியுமா?

  • November 9, 2025
  • 0 Comments

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன் ‘ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஜனநாயகன் தான் எங்கும் ஹாட் டொபிக்காக இருக்கின்றது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், கோலிவுட் திரையுலகின் முதல் 1000 கோடி ரூபாய் என்ற சாதனையை படைக்குமா? என்பதும் பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மமிதா பைஜூ முக்கிய ரோலில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

இலங்கை

பாலியல் கல்வித் திட்டம் – புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் அவசியமானதா? பேராயர் விமர்சனம்!

  • November 9, 2025
  • 0 Comments

இலங்கையின் புதிய பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்க முன்மொழியப்பட்ட “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். மீரிகம-கிணதேனியா பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயத்தை மீண்டும் திறக்கும் விழாவில் பேசிய அவர், திட்டமிட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த முயற்சி சர்வதேச அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார். முன்மொழியப்பட்ட பாடத்திட்டம் 6 ஆம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த […]

உலகம்

ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை!

  • November 9, 2025
  • 0 Comments

ஜப்பானின் இவாட்  (Iwate) மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவானதைத் தொடர்ந்து மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் கடற்கரையில் ஒரு மீட்டர் (3 அடி) வரை அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதேவேளை நேற்று மற்றும் அதற்கு முன்தினத்தில் வடக்கு பசிபிக் பெருங்கடலில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன. குறைந்தது 05 நிலநடுக்கங்கள் பதிவானதான மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

அமெரிக்காவின் அதி ரகசிய ஏவுகணையின் படம் முதல்முறையாக வெளியீடு!

  • November 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அதி ரகசிய ஏவுகணை ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில்  சோதனை விமானத்தில் இருந்தபோது முதல்முறையாக படம்பிடிக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு தனது இராணுவ பலத்தை காட்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அக்டோபர் மாத இறுதியில் விமானப் புகைப்படக் கலைஞர் இயன் ரெச்சியோ ( Ian Recchio ) இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஏவுகணை டார்ச்52 (Torch52)  எனப்படும் 488,000 பவுண்டு எடையுள்ள B-52H ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸில் […]

இலங்கை செய்தி

NPP அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – தோட்ட தொழிலாளர்கள்!

  • November 9, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாயாக  உயர்த்த அரசாங்கம்  முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த முடிவை அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். இதற்காக ஜனாதிபதிக்கு நன்றிக்கூறியுள்ள மக்கள் தோட்ட சமூகங்களின் நீண்டகால கஷ்டங்களை ஒப்புக்கொண்ட ஒரு வரலாற்று மற்றும் இரக்கமுள்ள முடிவு என்று விவரித்தனர். வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், ஒரு அரசாங்கம் போராட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்கள் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் […]

ஐரோப்பா செய்தி

சுவீடன் தலைநருக்கு அருகில் பறந்து சென்ற மர்ம ட்ரோன் – கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு!

  • November 9, 2025
  • 0 Comments

சுவீடன் தலைநகர்  ஸ்டாக்ஹோமுக்கு (Stockholm) வெளியே உள்ள ஒரு லிடிங்கோ தீவில் (Lidingö island ) மர்ம ட்ரோன் ஒன்று பறந்து சென்று குப்பைகளை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்ய வர்த்தகக் குழுவின் வில்லாவின் மீது குறித்த ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும், ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் நாசவேலை மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் வழக்கு […]