நாளை நடக்கப்போவது என்ன? இன்று வெளியான அறிக்கை
நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாளை (8) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. […]













