ஐரோப்பா

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ட்ரோன் தாக்குதல்கள்!

  • December 7, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைனிய அதிகாரிகள் நடத்திய மூன்றாவது நாள் பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய நகரமான கிரெமென்சுக்கில் (Kremenchuk)  உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் கியேவ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதாபிமானம்!

  • December 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர். இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளிக்கப்பட்டன. இந்த பொருட்களில், அரிசி 325kg, […]

இலங்கை

இலங்கையில் ஒரு முட்டை 70 ரூபாய்? இறைச்சிக்கு தட்டுப்பாடு?

  • December 7, 2025
  • 0 Comments

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட பேரழிவினால் சுமார் 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் எனவும் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலையால் முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பெரும் வெள்ளம் காரணமாக பண்ணையில் […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு செய்தி

கத்தியுடன் பாடசாலைக்கு செல்லும் லண்டன் மாணவர்கள் – பொலிஸாரின் புதிய எச்சரிக்கை!

  • December 7, 2025
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை(29) லண்டன் Bushey (High Street) Vu Lounge, என்ற உணவகத்தில் ஜெயந்தன் என்ற இளம் குடும்பஸ்தார் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளார். அங்கே 25 வயதுடைய Dequarn Williams என்ற நபருடன் ஜெயந்தன் வாக்குவாதப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தபோதே, உணவகத்தில் இருந்தவர் எவரோ பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் பொலிசார் வரவில்லை. இது இவ்வாறு இருக்க ஜெயந்தன் உணவை அருந்திவிட்டு, வெளியே அதாவது சீ-ஷா பாருக்கு செல்லும் ஒரு ஓடைக்குச் செல்ல முற்பட்ட வேளை( […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்காக களத்தில் இறங்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

  • December 7, 2025
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துப்பரவு பணியில் ஈடுப்பட்டு வருவது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருமளவு மக்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மையாக்குவதுடன், தேவையானவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டவர்கள், களத்தில் இறங்கி துப்பரவு […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி மூலம் 100 கோடி! ஹிஸ்புல்லாஹ்வின் உறுதிமொழி.

  • December 7, 2025
  • 0 Comments

அனர்த்தத்தினால் அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன் ஒத்துழைப்பு வழங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். […]

இலங்கை

பூசா சிறைச்சாலையில் வெடித்த கலவரம் – கண்காணிப்பாளர் படுகாயம்!

  • December 7, 2025
  • 0 Comments

பூசா சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூசா சிறைச்சாலையின் கைதிகள் குழு ஒன்றை வேறு அறைகளுக்கு மாற்ற முயன்றபோது இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைதிகள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போது நிலைமை சீராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

ஆப்பிரிக்க நாடான பெனினில் ஆட்சி கவிழ்ப்பு! எல்லை மூடப்பட்டதாக அறிவிப்பு!

  • December 7, 2025
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் (Benin) இராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர்  ஜனாதிபதி பேட்ரிஸ்  டாலோனை ( Patrice Talon) பதவி நீக்கம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். பெனினில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திலிருந்து வந்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தலைமையகமான கோட்டோனோவின் (Cotonou)  முக்கிய நகரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டம் இடைநிறுத்தப்படுவதாகவும், அனைத்து நில எல்லைகளையும் , நாட்டின் வான்வெளியையும் […]

இலங்கை

யாழ். வடமராட்சியில் அதிசயம்! அச்சத்தில் மக்கள்

  • December 7, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் காலநிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதிலிருந்து இன்னும் வெளியில் வராத நிலையில், மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே பெரும் கேள்வியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் […]

ஐரோப்பா

லண்டன் விமான நிலையத்தில் பயணிகள் மீது மிளகு தண்ணீர் தெளிப்பு!

  • December 7, 2025
  • 0 Comments

லண்டன் ஹீத்ரோ (Heathrow Airport) விமான நிலையத்தில் உள்ள  வாகன நிறுத்துமிடத்தில் சில ஆண்கள் மிளகு கலந்த தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்குப் பிறகு டெர்மினல் 3 இல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஆண்களைக் கொண்ட ஒரு குழுவினர் பயணிகள் மீது மிளகு கலந்த தண்ணீரை தெளித்து  அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில்,  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் […]

error: Content is protected !!