ஐரோப்பா செய்தி

UKவில் ஆபத்தானவர்களாக அறியப்பட்ட 170 பேரை நாடுகடத்த முடியாமல் தவிக்கும் அரசாங்கம்!

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  மனித உரிமைச் சட்டங்களால்  அதிக ஆபத்துள்ள நபர்களை நாடு கடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக அதிகாரிகள் அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உள்துறை அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது. சுமார் 170 ஆபத்தான வெளிநாட்டினரை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில்  பாதிக்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதம் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்று சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பிரிட்டனில் தங்கியிருப்பது “அவமானகரமானது” என்று […]

இலங்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதி நாளை முதல் திறப்பு

  • December 7, 2025
  • 0 Comments

கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தில் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. அதிக உயிரிழப்புகளும் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகி இருந்தது. கடுகன்னாவ பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருந்தன. தற்பேோது மழை மற்றும் வெள்ள நிலை சீராகி வரும் நிலையில், மீட்பு பணிகள், […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி

  • December 7, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் […]

இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை : மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

  • December 7, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது இன்று (7) மாலை 4 மணி முதல் நாளை(8) மாலை 4 மணி வரையான காலப்பகுதி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் நிலை எச்சரிக்கை 4 மாவட்டங்களுக்கும், 2ஆம் நிலை எச்சரிக்கை 5 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கீழே கொடுக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை எச்சரிக்கை […]

உலகம்

காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!

  • December 7, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். காசா அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், அமைதி திட்டத்தை விரிவுப்படுத்துவது மற்றும் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக  அவர் அறிவித்துள்ளார். பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அமைதி திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது […]

இலங்கை செய்தி

புளியங்குளம் குளக்கட்டினை சீர் செய்யும் இலங்கை விமானப்படை.

  • December 7, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் குளம் சேதம் அடைந்தது இதனூடாக அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர் உடைந்த அந்த குளக்கட்டினை சீர்திருத்தம் செய்யும் பணியில் வவுனியா இலங்கை விமானப்படையினர் இன்று( 2025 டிசம்பர் 06 ) மேற்கொண்டனர்.

இலங்கை செய்தி

மியான்மாரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள்

  • December 7, 2025
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இவற்றில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்கும் இதனை மியான்மருக்கான இலங்கைத் தூதர் திருமதி மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் திரு. சாவ் பியோ வின் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய பட்ஜெட் – பாரிய நன்மையை பெறும் புலம்பெயர்ந்தோர்!

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 350,000 புலம் பெயர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது. புதிய பகுப்பாய்வு, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கூடுதல் கொடுப்பனவுகளில் மிகப்பெரிய பங்கைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் நன்மைக்கான உச்சவரம்பு இரத்து செய்யப்பட்டதை  தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட  […]

இலங்கை செய்தி

இதுவரை 18 சடலங்களை மீட்டுள்ள UAE யின் மீட்புக்குழு

  • December 7, 2025
  • 0 Comments

இலங்கையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய அரபு எமிரேட் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் நேற்று தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. K9 அலகுகள், மேம்பட்ட இருப்பிட உபகரணங்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக மண்சரிவுகள் சரிவுகள் மற்றும் ஆழமான இடிபாடுகள் வழியாக குழு செயல்பட்டது. அவர்களின் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் பிரிவு ஒரு வயதான பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட காயமடைந்த 8 நபர்களுக்கு சம்பவ இடத்திலேயே […]

இந்தியா செய்தி

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை வந்த அமெரிக்க விமானப்படை.

  • December 7, 2025
  • 0 Comments

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை… ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று (டிசம்பர் 07, 2025) இலங்கைக்கு வந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு […]

error: Content is protected !!