உலகம் செய்தி

டைனோசர் முட்டைகள் வெளிப்படுத்திய காலநிலை இரகசியங்கள்

  • September 23, 2025
  • 0 Comments

சீன விஞ்ஞானிகள் குழு டைனோசர் முட்டைகளின் சரியான வயதை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. Uranium–Lead (U-Pb) dating எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இதில் முட்டை ஓடுகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈய மூலக்கூறுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வயது தீர்மானிக்கப்பட்டது. இதைத்தான் விஞ்ஞானிகள் வரலாறு நமக்குச் சொல்லும் நிமிடங்களின் எண்ணிக்கை என அழைக்கிறார்கள். அதற்கமைய, சீனாவின் Yunyang Basinஇல் காணப்படும் டைனோசர் முட்டைகளின் வயது சுமார் 85 மில்லியன் ஆண்டுகள் பழமையானது […]

உலகம் செய்தி

புவி வெப்பமடைதலுக்கு ஏற்ப புதிய ஆடை ஒன்றை வடிவமைத்த விஞ்ஞானிகள்

  • September 23, 2025
  • 0 Comments

வெப்பமான காலநிலையைத் தாங்கக்கூடிய ஒரு வகை குளிரூட்டும் ஆடைகளை ஹொங்கொங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உருவாக்கியுள்ளனர். மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நிபுணரான பேராசிரியர் டஹுவா சோவ், இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். Omni-Cool-Dry எனப்படும் புதிய குளிரூட்டும் தொழில்நுட்பம், சாதாரண துணிகளை விட உடல் வெப்பநிலையை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸ் குறைக்கும் மற்றும் தோலில் இருந்து வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் அணிபவர் வறண்டு இருக்க உதவுகிறது. இது மனித உடல் நிர்வகிக்கக்கூடியதை விட மூன்று மடங்கு வேகமாக […]

செய்தி விளையாட்டு

Ballon d’Or விருதுகளை வென்ற உஸ்மேன் டெம்ப்லே மற்றும் ஐடானா போன்மதி

  • September 22, 2025
  • 0 Comments

வருடந்தோறும் நடைபெறும் கால்பந்து வீரர்களுக்கான பிரபல விருது நிகழ்வான Ballon d’Or இம்முறை பிரான்சின் பாரிஸில் நடைபெற்றது. 2025ம் ஆண்டிற்கான Ballon d’Or நிகழ்வில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனின் (PSG) வீரர் உஸ்மேன் டெம்பேலே மற்றும் பார்சிலோனாவின் (FCB) வீராங்கனை ஐதானா போன்மதி ஆகியோர் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளனர். கடந்த சீசனில் மூன்று முக்கிய தொடர்களை வென்ற முதல் பிரெஞ்சு அணியாக PSGற்கு உதவிய டெம்பேலே, பார்சிலோனாவின் லாமின் யமலை வீழ்த்தி ஆண்கள் விருதைப் வென்றார். […]

உலகம் செய்தி

அமெரிக்காவால் தாக்கப்பட்ட படகிலிருந்து 1,000 கிலோ கோக்கைனை கைப்பற்றிய டொமினிகன் குடியரசு

  • September 22, 2025
  • 0 Comments

கரீபியனில் அதிகரித்து வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், டொமினிகன் குடியரசுப் படைகள் அமெரிக்க கடற்படையால் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு வேகப் படகிலிருந்து நூற்றுக்கணக்கான கோக்கைன் பொதிகளைக் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் போதைப்பொருள் அமலாக்க நிறுவனமான டொமினிகன் குடியரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேசிய இயக்குநரகம் (DNCD), 377 பொதிகளில் 1,000 கிலோ (2,200 பவுண்டு) கோக்கைனை மீட்டதாக தெரிவித்துள்ளது. டொமினிகன் குடியரசின் தெற்கு கடற்கரையில் பீட்டா தீவுக்கு தெற்கே சுமார் 80 கடல் மைல் (150 […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஐ. நா பொது கூட்டத்திற்கு முன்னதாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்

  • September 22, 2025
  • 0 Comments

நியூயார்க்கில் நடைபெறும் வருடாந்திர ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்கு முன்னதாக, பல மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. பிரான்ஸ் இந்த அறிவிப்பு “வரலாற்று மற்றும் துணிச்சலான முடிவு” என்று பாலஸ்தீன ஆணையம் பாராட்டி உள்ளது. “நட்பு நாடுகளான பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததை வெளியுறவு மற்றும் வெளிநாட்டினர் அமைச்சகம் வரவேற்கிறது, இது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுடன் ஒத்துப்போகும் ஒரு வரலாற்று மற்றும் […]

இலங்கை செய்தி

ஐ.நா சபையின் 80வது பொதுச் சபை அமர்விற்காக அமெரிக்கா புறப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார

  • September 22, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார். இரவு 10:20 மணியளவில் துபாய் செல்லும் விமானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புறப்பட்டுள்ளார். இணைப்பு விமானத்தில் நியூயார்க் நகரத்திற்குச் செல்ல உள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல அரசு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர். இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை […]

செய்தி வட அமெரிக்கா

நியூயார்க்கில் மார்கோ ரூபியோவை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

  • September 22, 2025
  • 0 Comments

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விதித்துள்ளார். ஐ.நா பொதுச் சபையின் 80வது அமர்வின் ஒரு பகுதியாக லோட்டே நியூயார்க் அரண்மனையில் நடந்த சந்திப்பு, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்ததைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. “இன்று நியூயார்க்கில் @SecRubioவை சந்தித்தது நல்லது. எங்கள் உரையாடல் தற்போதைய கவலைக்குரிய பல்வேறு இருதரப்பு […]

செய்தி வட அமெரிக்கா

கணவரின் கொள்கைக்காக கொலையாளியை மன்னித்த சார்லி கிர்க்கின் மனைவி

  • September 22, 2025
  • 0 Comments

அமெரிக்க வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்கின் மனைவியான 36 வயது எரிகா கிர்க், கணவரின் நினைவு நிகழ்வில் ஆற்றிய உரையில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். “என் கணவர் சார்லி, இளைஞர்களை காப்பாற்ற விரும்பினார், ஆகையால் அந்த மனிதர், அந்த இளைஞனை நான் மன்னிக்கிறேன்” என்று அரிசோனாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட 60,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 31 வயதான சார்லி கிர்க், செப்டம்பர் 10 அன்று உட்டா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 4 மாத பேத்தியை கொலை செய்த பாட்டி

  • September 22, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் சியோனி மால்வாவின் பர்கேடி கிராமத்தில் ஒரு பாட்டி தனது நான்கு மாத பேத்தியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப வாரிசாக ஆண் குழந்தையை எதிர்பார்த்த பாட்டி அதிருப்தியில் பேத்தியை கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது. மீனாபாய் அஸ்வரே என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, முற்றத்தில் ஊஞ்சலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது வாயில் துணியை திணித்து மூச்சுத் திணறடித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் தாய் மீரா, வீட்டின் பின்னால் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் ஆயுத குற்றச்சாட்டில் காலிஸ்தானி பயங்கரவாதி இந்தர்ஜித் சிங் கோசல் கைது

  • September 22, 2025
  • 0 Comments

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் முக்கிய உதவியாளர் இந்தர்ஜித் சிங் கோசல் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 2023ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இறந்த பிறகு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ)ன் முக்கிய கனடா அமைப்பாளராக இந்தர்ஜித் சிங் கோசல் ஆனார். ஒட்டாவாவில் துப்பாக்கிகள் வைத்திருந்தது தொடர்பான பல குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 36 வயதான அவர் ஒரு வருடத்திற்குள் கனேடிய காவல்துறையினரால் கைது […]

error: Content is protected !!