இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

CID வசமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம்?

  • September 4, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் உயர்மட்ட அரசு அதிகாரிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், […]

விளையாட்டு

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் – மனம் திறந்த விராட் கோலி!

  • September 4, 2025
  • 0 Comments

ஆர்சிபி அணியின் 2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரமான சம்பவம் குறித்து விராட் கோலி தனது மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த ஜூன் 4, 2025 அன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியைக் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான தருணத்தை பெரும் சோகமாக மாற்றியது. இந்த நிலையில், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ப்ரீமியம் குடும்ப கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூடியூப்!

  • September 4, 2025
  • 0 Comments

யூடியூப் பிரீமியம் குடும்ப கணக்கு வைத்திருப்பவர்களுக்கு யூடியூப் நிறுவனம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த கணக்கு மூலம், விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம், உயர் தரத்தில் வீடியோக்களை ஆஃப்லைனில் பதிவிறக்கலாம், மற்றும் பின்னணியில் (Background) வீடியோக்களை இயக்கலாம் போன்ற சிறப்பு வசதிகளை ஆறு பேர் வரை (குடும்ப மேலாளர் உட்பட) பகிர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த கணக்கில் உள்ள அனைவரும் ஒரே வீட்டில் (அதாவது ஒரே முகவரியில்) வசிக்க வேண்டும் என்று யூடியூப் விதிமுறை கூறுகிறது. […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – விப்ரியோ பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடல்களின் வெப்பமயமாதலால், விப்ரியோ வல்னிபிகஸ் என்ற பாக்டீரியா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது . இந்த பாக்டீரியா வெதுவெதுப்பான, குறைந்த உப்புள்ள நீரில் வளரும் நோய்க்கிருமியாகும். விப்ரியோசிஸ் எனப்படும் இந்த தொற்று, பொதுவாக பச்சை மட்டி மீன்கள் அல்லது திறந்த காயத்தில் கடல் நீர் நுழைவதின் மூலம் பரவுகிறது. மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவே உள்ளதாக CDC மற்றும் JAMA நிறுவல்கள் தெரிவித்துள்ளன. 2023ஆம் ஆண்டு, இதனால் ஏற்பட்ட இறப்புகள் கடல் […]

இலங்கை

இலங்கையின் இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • September 4, 2025
  • 0 Comments

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் […]

செய்தி

40,000 போர்க்காலப் படைவீரர்களுடன் காஸாவின் மிகப்பெரிய நகரை கைப்பற்ற தயாராகும் இஸ்ரேல்

  • September 4, 2025
  • 0 Comments

காஸா சிட்டியில் பல்லாயிரம் போர்க் காலப் படைவீரர்களைக் களமிறக்குவதற்கு இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. காஸாவின் மிகப்பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சுமார் 40,000 போர்க்காலப் படைவீரர்கள் திரண்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. காஸா சிட்டி புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாளாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் செல்லாத இடங்களிலும் துருப்பினர் புகுந்திருப்பதாகச் சொல்கிறார் இஸ்ரேலிய ராணுவத் தளபதி. அமைச்சரவையிலும், நாட்டிலும் எதிர்ப்பு […]

செய்தி வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையின் ஜன்னலிலிருந்து வீசப்பட்ட மர்ம பை – குழப்பத்தில் டிரம்ப்

  • September 4, 2025
  • 0 Comments

வெள்ளை மாளிகையின் ஜன்னலிலிருந்து கறுப்புப் பை வெளியே வீசப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. எனினும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தின்போது அந்தக் காணொளி குறித்து ஒருவர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பினார். அந்தக் காணொளியைத் தம்மிடம் காட்டுமாறு கூறிய டிரம்ப், அதைப் பார்த்துவிட்டு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்படும் காணொளி உண்மையானது போன்றே இருப்பதாக கூறினார். அது சற்று அச்சுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் அது […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய தாக்குதலில் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு நிலத்தடி பாடசாலை கட்டியுள்ள உக்ரேன்

  • September 4, 2025
  • 0 Comments

உக்ரைனில் தொடரும் போரால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாதென்பதில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க நிலத்தடியில் உக்ரைன் பாடசாலை கட்டியுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பாடசாலை செல்லப் பிள்ளைகள் தயாராகிவருகின்றனர். பிள்ளைகள் பாடசாலைகளில் பாதுகாப்பாக இருக்க புதிய நிலத்தடிப் பாடசாலை கூடத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அப்படியொரு கட்டடம் கார்கிவ் நகரில் இருக்கிறது. அதில் மூன்று தளங்களுக்குக் கீழேதான் வகுப்புகள் நடக்கின்றன. வெளியில் நடக்கும் எதுவும் பிள்ளைகளைப் பாதிக்காது. வெடிப்புச் சத்தமோ போர் அபாய […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை அழித்து வரும் டிரம்ப் – எம்.பி குற்றச்சாட்டு

  • September 4, 2025
  • 0 Comments

அமெரிக்கா-இந்தியா இடையேயான 30 ஆண்டுகால உறவை டிரம்ப் அழித்து வருவதாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர் ரோகித் கண்ணா குற்றம் சுமத்தியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசைப் பரிந்துரைக்க பிரதமர் மோடி மறுப்பதால், அவர் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக ரோகித் கண்ணா குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கு விதிக்கப்பட்டதை விட இந்தியா மீது 50% அளவுக்கு அதிகமான வரியை டிரம்ப் விதித்ததாகவும் அவர் சாடினார். இந்த வரிகள் அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய தோல் மற்றும் ஜவுளி ஏற்றுமதியை பாதித்துள்ளதாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லிஸ்பன் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

  • September 3, 2025
  • 0 Comments

சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான லிஸ்பனின் குளோரியா ஃபுனிகுலர் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 18 பேர் காயமடைந்தனர் என்று அவசர மருத்துவ சேவை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவில்லை அல்லது அவர்களின் தேசியத்தை வெளியிடவில்லை, ஆனால் இறந்தவர்களில் சில வெளிநாட்டினரும் இருப்பதாகக் குறிப்பிட்டுளளார். “இது எங்கள் நகரத்திற்கு ஒரு சோகமான நாள். லிஸ்பன் துக்கத்தில் உள்ளது, இது ஒரு சோகமான சம்பவம்,” என்று […]