யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்
யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று வாந்தியெடுத்தபின் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுன்னாகம் – சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பதிகளின் சிசுவே உயிரிழந்தது. தாயார் இன்று சிசுவிற்கு பாலூட்டி உறங்க வைத்த பின்னர் மதியம் 1.30 அளவில் சிசுவை தூக்கத்திலிருந்து எழுப்பியவேளை சிசு வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது. இந்நிலையில், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவேளை, சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை […]













