இந்தியா செய்தி

கங்கை நீர் குறித்து எச்சரிக்கை விடுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

  • December 4, 2024
  • 0 Comments

உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி நதி நீர் A முதல் E வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. A என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம். அதே சமயம் E என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான […]

ஆசியா செய்தி

சவூதி அரேபியாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் உத்தரபிரதேச நபருக்கு மரண தண்டனை

  • December 4, 2024
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய துணை தூதரகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் வந்ததை மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா உறுதிப்படுத்தினார். “முண்டலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரச்சௌதி கிராமத்தில் வசிக்கும் ஜைத் ஜுனைத், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மெக்காவில் உள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கருணை […]

இலங்கை செய்தி

அரசியல் நோக்கத்துக்காக இனவாதத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • December 4, 2024
  • 0 Comments

தேசிய பாதுகாப்புக்கு பிரஜைகளை பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எந்தவொரு அரசியல் நோக்கத்துக்கவும் இனவாதத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த தருணத்தில் இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாற இடமளிக்காமல் முற்றாக […]

உலகம் செய்தி

சுவீடனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

  • December 4, 2024
  • 0 Comments

சுவீடன் நாட்டில் Linderöd நகரில் Kristianstad நகராட்சியில் E22 நெடுஞ்சாலையில் ஒரு தனி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்தனர். விபத்துக்குள்ளான காரில் இரண்டு இறந்த குழந்தைகளை கண்டுபிடிக்க இரண்டு மணிநேரம் ஆனது. இதற்கான காரணம் இப்போது ஆராயப்பட வேண்டும்,என்று Expressen செய்தி எழுதியுள்ளது. Kristianstad நகராட்சி மீட்பு சேவையின் தலைவர், ஆண்ட்ரியாஸ் பெங்ட்சன், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குழுவினர் விபத்துக்குள்ளான காருக்குள் வெளிச்சம் பிடித்து பார்த்தபோது எதுவும் இருக்கவில்லை என்று […]

இலங்கை செய்தி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு பிணை

  • December 4, 2024
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 72 மணி நேர விளக்கமறியலுக்குப் பின்னர் இளைஞன் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். மேலும், இரண்டு […]

செய்தி வட அமெரிக்கா

யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுக் கொலை

  • December 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி திட்டங்களை வழங்கும் முன்னணி நிறுவனம் யுனைடெட் ஹெல்த்கேர். மத்திய-மாநில அரசின் நிதியுதவி பெறும் மருத்துவ உதவித் திட்டங்களுக்கான காப்பீட்டையும் இந்நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் தாமஸ்நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர். யுனைடெட் ஹெல்த்கேர் சார்பில் வருடாந்திர முதலீட்டாளர் மாநாடு அந்த ஓட்டலில் […]

இலங்கை செய்தி

இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம்

  • December 4, 2024
  • 0 Comments

வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். விசாரணையில் குறிப்பிட்ட […]

இலங்கை செய்தி

ஹிருணிக்காவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

  • December 4, 2024
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது. கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லையெனவும் ஹிருணிக்கா தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதியரசர்கள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை – ஜனாதிபதி

  • December 4, 2024
  • 0 Comments

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநயக்க கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில இனவாத கருத்துக்களால் அதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

காசாவில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணத்தின் விளிம்பில்

  • December 4, 2024
  • 0 Comments

வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவை இஸ்ரேல் முற்றுகையிட்டதில் 100க்கும் மேற்பட்டோர் கமல் அத்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புப் படைகள் இங்கு தொடர்ந்து குண்டுகளை வீசுவதால், உணவு, மருந்து பணம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மறுக்க அச்சுறுத்துகிறது. ட்ரோன் தாக்குதலில் மூன்று மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அல்-அவ்தா மருத்துவமனையிலும் இதே நிலைதான் உள்ளது என்பதை காசா சுகாதார அமைச்சகம் அறிந்திருக்கிறது. இஸ்ரேலின் அடாவடித்தனத்தால் ஆக்ஸிஜன் […]