ஐரோப்பா

பிரித்தானியாவில் 80 மைல் வேகத்தில் வீசும் காற்று : ரயில் தாமதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!

  • December 5, 2024
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் சீரற்ற வானிலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கைகள் இன்று (05.12) மதியம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில நாட்களில் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் நாடு முழுவதும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர். வடக்கு மற்றும் வடமேற்கு ஸ்காட்லாந்தின் சில இடங்களில் மணிக்கு 65-75 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

பொழுதுபோக்கு

கன்னட சூப்பர் ஸ்டாருக்கு புற்றுநோய்; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை

  • December 5, 2024
  • 0 Comments

மறைந்த பழம்பெறும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான டாக்டர் ராஜ்குமாரின் மகன் தான் சிவ ராஜ்குமார். 62 வயதாகும் இவர், சென்னையில் பிறந்து வளர்த்தவர். அதே போல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டியூட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு, பின்னர் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஜெயிலர் திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நரசிம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார் சிவராஜ் குமார். அதே போல் தனுஷ் நடிப்பில் […]

வட அமெரிக்கா

நாசாவின் தலைவராக தனியார் விண்வெளி வீரரும், Shift4 -ன் CEO ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்

  • December 5, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (நாசா அமைப்பு) அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் நியமித்து உள்ளார். ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அவர் கோடீசுவரராவார். இதுபற்றி டிரம்ப் கூறும்போது, ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நாசா அமைப்பின் கண்டுபிடிப்பு மற்றும் உந்துதல், விண்வெளி அறிவியல், […]

இலங்கை

இலங்கை : சதொசவில் சலுகை விலையில் தேங்காய் மற்றும் அரிசியை பெற்றுக்கொள்ளலாம்!

  • December 5, 2024
  • 0 Comments

சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி இன்று (05) சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக லங்கா சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார். ஒருவருக்கு 3 தேங்காய் மற்றும் 5 கிலோ அரிசி ஒரே நேரத்தில் கிடைக்கும் என்றார். அதன்படி இன்று முதல் கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளிலும், நாளை (06) முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள சதொச கிளைகளிலும் தேங்காய் மற்றும் அரிசியை கொள்வனவு செய்ய […]

ஆசியா

பெண்களின் மருத்துவ கல்வி தொடர்பில் தாலிபன்காளின் முடிவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ள கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்

  • December 5, 2024
  • 0 Comments

பேறுகால பெண்களுக்கு துணை செய்வது (midwifery) மற்றும் நர்சிங் படிப்புகளை பெண்கள் பயில ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் அரசு தடை விதித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. குறிப்பாக தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பெண்கள் மருத்துவ நிறுவனங்களுக்கு செல்வதைத் தடுக்கும் உத்தரவை வெளியிட்டதாக செய்திகள் வெளியானது. அந்நாட்டில் ஏற்கனவே மருத்துவம் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களது பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்த விவகாரத்தில் ரஷீத் கான் தனது வருத்தத்தையும் […]

இலங்கை

இலங்கையில் 23 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்த காதல்

  • December 5, 2024
  • 0 Comments

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண், தாக்குதல் நடத்திய நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொல்லினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் […]

வட அமெரிக்கா

கனடாவின் வான்கூவர் பகுதியில் கத்தி குத்து தாக்குதல் : இருவர் படுகாயம், தாக்குதல்தாரி படுகொலை!

  • December 5, 2024
  • 0 Comments

கனடாவின் வான்கூவர் கன்வீனியன்ஸ் ஸ்டோரில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 119 என்ற அவசர தொலைபேசிக்கு அறிவித்துள்ள நிலையில், அவ்விடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தாக்குதல்தாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக ரெிவிக்கப்படுகிறது. இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  மேலும் பாதிக்கப்பட்ட இருவரின் காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று காவல்துறை விவரித்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

02 வருட வீழ்ச்சிக்கு பிறகு மிதமான வளர்ச்சியை காட்டும் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம்!

  • December 5, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சமீபத்திய மேம்பாட்டுப் புதுப்பிப்பில், நிதி நிறுவனம் 2.7% சுமாரான GDP வளர்ச்சியானது தனியார் நுகர்வு மூலம் உந்தப்பட்டதாகக் கூறியது. பகுதியளவு மீட்சி, உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சியுடன் சேர்ந்து, படிப்படியாக குடும்ப நலனை மேம்படுத்த உதவியதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் வெளிநாட்டு உதவியை பெரிதும் நம்பியிருந்தது. இருப்பினும் ஊழல் பொருளாதர சீர்குலைவிற்கு […]

இலங்கை

இலங்கையில் மலை ஒன்றை பார்வையிட சென்ற மாணவர்கள் மாயம்!

  • December 5, 2024
  • 0 Comments

கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் அடங்கிய குழு ஹன்டானா மலையை பார்வையிடச் சென்று தொலைந்து போனதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர், ராணுவத்தினர் அந்த கும்பலை பத்திரமாக மீட்டுள்ளனர். 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களும் இவ்வாறு தொலைந்து போயிருந்ததாக கூறப்படுகிறது. ஹன்டானா மலையை பார்வையிட்ட அவர்கள், அதில் ஏறி, அங்குள்ள பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. காலில் சுளுக்கு மற்றும் மூடுபனி காரணமாக வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், திரும்பிச் செல்ல […]

ஆசியா

அதிபர் யூன் சுக் இயோலைக் கட்சியிலிருந்து விலகச் சொன்ன ஆளுங்கட்சித் தலைவர்

  • December 5, 2024
  • 0 Comments

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் கட்சியிலிருந்து விலகும்படி ஆளும் மக்கள் சக்திக் கட்சியின் தலைமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிபர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தும் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தைத் தடைசெய்ய உறுதிகூறியபோதும் யூனைக் கட்சியிலிருந்து விலகும்படி கேட்டுக்கொண்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஹான் டோங்-ஹூன் செய்தியாளர்களிடம் டிசம்பர் 5ஆம் திகதி கூறினார்.அரசியலமைப்புக்கு விரோதமான வகையில் அதிபர் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்ததைத் தமது கட்சி தற்காக்க முயலவில்லை என்றும் அவர் கூறினார். அதிபரின் அந்த அறிவிப்பு தொடர்பில் […]