பங்களாதேஷில் பிரதமர் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்!
2022ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘அரகலயா’ மக்கள் போராட்டத்தைப் போன்று பங்களாதேஷில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரண்மனையை முற்றுகையிட்டுள்ளனர். ஊடக அறிக்கைகளின்படி, டாக்காவில் உள்ள பிரதமர் ஹசீனாவின் அரண்மனையை இன்று முற்றுகையிட போராட்டக்காரர்கள் தேசிய ஊரடங்கு உத்தரவை புறக்கணித்தனர். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் அத்துமீறி நுழைவதை தேசிய தொலைக்காட்சியில் படங்கள் காட்டின. ஹசீனா வெளியேறிய செய்தி பரவத் தொடங்கியபோது, பெரும் கூட்டமான எதிர்ப்பாளர்களின் மகிழ்ச்சிக் காட்சிகள் தெருவில் இருப்பதைக் […]













