உலகம்

ஜெனிவா பல்கலைக்கழக கட்டிடத்தினை ஆக்கிரமித்த மாணவர்கள் : சுவிஸ் போலீசார் அதிரடி நடவடிக்கை

ஜெனிவா பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறக்குறைய ஒரு வாரமாக அக்கிரமி’த்திருந்த சுமார் 50 பாலஸ்தீன ஆதரவு மாணவர் போராட்டக்காரர்களை சுவிஸ் போலீசார் அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுமார் 20 அதிகாரிகள் யூனிமெயில் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கைவிலங்கிடப்பட்டு வேன்களில் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக வளாகங்கள், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் நிறுவனங்களில் இருந்து கல்வி நிறுவனங்கள் விலகக் கோரி வரும் பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் நோய்த்தொற்று : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 14, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கக்குவான் இருமல் தீவிரமான வெடிப்புக்கு தயாராகி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ஹெச்எஸ் மருத்துவர்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை  வீட்டில் தனிமைப்படுத்தப்படும் போது முகமூடிகளை அணியுமாறு வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,793  பேர் குறித்த இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் உள்ள வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் மருத்துவ மையம் அம்மை மற்றும் வூப்பிங் இருமல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

இலங்கை

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இது குறித்து கல்வி அமைச்சும் (Ministry of Education) சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் களுத்துறை (Kalutara) மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் […]

வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் இரண்டாவது தடவையாக ஒலித்த இந்திய தேசப்பற்றுப் பாடல்

  • May 14, 2024
  • 0 Comments

ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசுபிக் தீவில் வசிப்பவர்களின் பாரம்பரிய மாதம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நேற்று (13)தடந்த கொண்டாட்டத்தன் போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மரைன் இசைக்குழுவினர் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்பு இந்தியாவின் தேசப்பற்றுப் பாடலான ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை வாசித்து அங்கு கூடியிருந்த ஏராளமான ஆசிய அமெரிக்கர்களை வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் இந்தியவின் தேசப்பற்றுப்படால் இசைக்கப்படுவது ஒராண்டு […]

உலகம்

”நீங்கள் எங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டீர்கள்” – இஸ்ரேல் பிரதமர் முன் கோஷம்!

  • May 14, 2024
  • 0 Comments

ஹமாஸால் பிடிபட்ட பணயக்கைதிகளின் உறவினர்கள் நீங்கள் எங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டீர்கள் என கோஷமிட்டுள்ளனர். ஜெருசலேமில் நடைபெற்ற மௌனப் போராட்டத்தில் பிரதமர் பேசத் தொடங்கியபோது மக்கள் இவ்வாறு கோஷமிட்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒக்டோபர் தாக்குதல் குறித்த தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கேலி சித்திரங்களை வைத்திருந்தனர். இதேவேளை தற்போதைய போரினால் காசாவின் 36 மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வேலை செய்கிறது. மற்றும் அனைத்து பொருட்களும் கடுமையான […]

ஆஸ்திரேலியா

ராணுவ ரகசிய ஆவணங்கள் கசிவு: ஆஸ்திரேலிய முன்னாள் ராணுவ வழக்கறிஞருக்குச் சிறை

  • May 14, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இருந்த ஆஸ்திரேலியச் சிறப்புப் படையின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய ராணுவ ஆவணங்களை ஊடகவியலாளர்களுடன் அந்நாட்டு முன்னாள் ராணுவ வழக்கறிஞரான டேவிட் மெக்பிரைட் பகிர்ந்துகொண்டார். இக்குற்றத்திற்காக டேவிட்டிற்கு ஐந்து ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீப்பளித்தது. திருட்டு, ரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டது உட்படத் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் டேவிட் நீதிமன்றத்தில் ஒப்புகொண்டுள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை டேவிட் ஒப்புகொண்டபோதிலும், நாட்டின் நலனுக்காக […]

ஐரோப்பா

பாங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகிதங்களை குறைக்குமா? 50/50 வீதம் வாய்ப்பு!

  • May 14, 2024
  • 0 Comments

பாங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட 50/50 ஆக உள்ளது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கிலாந்து பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்க்கை தரம் பழைய நிலைமைக்கு திரும்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பேங்க் ஆஃப் இங்கிலாந்தானது தனது வட்டி விகிதத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில நிபுணர்கள் தற்போதைய வட்டி விகிதத்தை இங்கிலாந்து தொடர்ந்து பேண வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கிடையில் பொருளாதாரக் கூட்டத்தில் […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

பிரித்தானியாவில் எடை இழப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்தால் மாரடைப்பை கட்டுப்படுத்த முடியும்!

  • May 14, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு எடை இழப்புக்கான ஜப்ஸ் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று இதய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற குறைப்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இருதய நோய் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்றாக எடை அதிகரிப்பு காணப்படுகிறது. பிரித்தானியாவின் உயர் மட்ட இருதய நோய் நிபுணர், 1990 களில் ஸ்டேடின்களுக்குப் பிறகு இதய நோயில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் Ozempic […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு விரைந்த ஆண்டனி பிளிங்கன் – ஸெலன்ஸ்கியுடன் ஆலோசனை

  • May 14, 2024
  • 0 Comments

உக்ரேன் அதிபருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆலோணனை நடத்தவுள்ளார். பொலந்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு இருந்து ரயிலில் அண்டை நாடான உக்ரைனுக்கு இன்று காலை சென்றடைந்ததாக (14) தகவல் வெளியாகியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி உக்ரைனுக்க திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது, உக்ரைன் அரசுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனியர்களுக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். உக்ரேனுக்கு […]

இலங்கை

இலங்கை : ஹெகலியவின் விளக்கமறியல் நீட்டிப்பு!

  • May 14, 2024
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்பித்த ரிட் மனுவை பரீசிலிக்க நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது. இந்த மனு இன்று (14) நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கெஹலியவின் ரிட் மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருந்து கொள்வனவு  தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை […]

error: Content is protected !!