ரஃபாவில் இஸ்ரேலிய படையெடுப்புக்கான திகதி நிர்ணயம் : நெதன்யாகு எச்சரிக்கை
தெற்கு காசா நகரமான ரஃபாவில் இருந்து நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கு தயார்படுத்துவதற்காக இஸ்ரேல் 40,000 கூடாரங்களை வழங்குவதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எகிப்திய எல்லையில் அமைந்துள்ள ரஃபாவில் இஸ்ரேலிய படையெடுப்புக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட திகதியை வெளியிடாமல் கூறியுள்ளார். காசாவில் ஹமாஸின் கடைசி பெரிய கோட்டை ரஃபா என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர் . மதிப்பிடப்பட்ட 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் – காஸாவின் மக்கள்தொகையில் […]













