இலங்கை

இலங்கையில் ஆரம்ப பாடசாலையொன்றில் போதை பொருள் உட்கொண்ட மாணவர்கள்!

  • February 17, 2024
  • 0 Comments

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய மூன்று மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும் ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற குழந்தையின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் […]

இலங்கை

இலங்கையில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட பேருந்துகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை!

  • February 17, 2024
  • 0 Comments

இவ்வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொழும்பு பிராந்தியத்தில் மாத்திரம் இவ்வாறான 103 சேவையில் ஈடுபடாத பேருந்துகள் உள்ளதாகவும், அந்த பேருந்துகளின் பதிவை இரத்து செய்யுமாறு அவற்றின் இலக்கங்களுடன் கூடிய அறிக்கை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் டிப்போக்களில் […]

இலங்கை

இலங்கை : தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் எச்சரி்க்கை!

  • February 17, 2024
  • 0 Comments

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழில் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக நேற்று (16.02) பாட அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்யந்த், மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இச்சந்திப்பில் மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக […]

பொழுதுபோக்கு

“சிவகார்த்திகேயன் குட்டி தளபதியா..?” ஒரே வார்த்தையில் பங்கம் செய்த ப்ளூ சட்டை

  • February 17, 2024
  • 0 Comments

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். மேடை நிகழ்ச்சிகள், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், சின்ன திரை என இறுதியாக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சிவகார்த்திகேயன். அவரது பிறந்தநாளான இன்று பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் சிவகார்த்திகேயனை பங்கம் செய்துள்ளார். நேற்று மாலை சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அமரன் என […]

இலங்கை

ரிதிகம பிரதேசத்தில் கிணற்றை எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  • February 17, 2024
  • 0 Comments

ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் மோட்டாரை போடும் முன் கிணற்றை சோதித்த வீட்டின் உரிமையாளர், கிணற்று தண்ணீரில் பொம்மை ஒன்று மிதப்பதைக் கண்டு அதை அகற்ற முற்பட்ட போது, பொம்மை இல்லை என்பதை உணர்ந்தார். பின்னர் அது ஒரு சிசுவின் சடலம் என தெரியவந்தது. பின்னர், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சம்பவ […]

இலங்கை

இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

  • February 17, 2024
  • 0 Comments

முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிய நாடுகளுக்கான விஜயத்தின் போது அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 23ம் திகதிவரை இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா திட்டமிட்டுள்ளார். இந்தியா மற்றும் மாலைதீவுக்கான விஜயங்களை முடித்துக் கொண்டு […]

தமிழ்நாடு

முதலமைச்சர் தன் முடிக்கு கொடுக்கும் நேரத்தைக் கூட நாட்டு மக்களுக்கு கொடுப்பதில்லை: உத்திரமேரூரில் முன்னாள் அமைச்சர் பேச்சு

  • February 17, 2024
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அதிமுக மத்திய ஒன்றியம் சார்பில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதனைகளை விளக்கியும், திமுக ஆட்சியில் மக்கள் விரோத போக்கை எடுத்துரைத்தும் உத்திரமேரூர் அடுத்துள்ள களியாம்பூண்டி, இளநகர் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் அதிமுக அமைச்சரும் அந்தக் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது முன்னாள் அமைச்சர் […]

பொழுதுபோக்கு

சைரன் திரைப்படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • February 17, 2024
  • 0 Comments

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். அப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்கள் நடித்தார், அதற்கு கோடியில் சம்பளம் பெற்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அந்த வெற்றிப் படத்திற்கு பிறகு இறைவன், அகிலன் படங்கள் வெளியாகி இருந்தது, இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சரியான வரவேற்பு பெறவில்லை. இந்த நேரத்தில் தான் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த சைரன் […]

இலங்கை

இலங்கையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து மீட்பு!

  • February 17, 2024
  • 0 Comments

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கும் அயலவர்கள் முறைப்பாடு செய்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் […]

இந்தியா

இந்தியாவில் இறந்ததாக கருதிக் கொள்ளி வைக்கும் நேரத்தில் கண்விழித்த பெண்ணால் அதிர்ச்சி

  • February 17, 2024
  • 0 Comments

இந்தியாவின் ஒடிஷா (Odisha) மாநிலத்தில் இறந்ததாக நம்பப்பட்ட ஒரு பெண்ணுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது கண்விழித்து அனைவரையும் அதிர்ச்சிக்காளாக்கியுள்ளார். 52 வயதுப் பெண் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு கண்விழித்துள்ளார். இம்மாதம் முதலாம் திகதி தீச் சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பணப் பற்றாக்குறையின் காரணமாக அவரின் கணவர் சிபாராம் பாலோவால் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இயலவில்லை. தனால் பாலோ மனைவியை வீட்டிற்குக் கொண்டுசென்றுள்ளார். இம்மாதம் 12ஆம் திகதி மனைவி கண் திறக்கவில்லை […]

error: Content is protected !!