இலங்கை

ஹெரோயினுடன் ‘வெலிவிட்ட சுதா’ கைது: சட்டவிரோத சொத்துக்கள் கைப்பற்றல்

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினருமான ‘வெலிவிட்ட சுதா’ என அழைக்கப்படும் சுதத் கித்சிறியை கடுவெல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 15 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த போது, மாலபே வெலிவிட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ‘வெலிவிட்ட சுத்தா’ முன்னர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து […]

இலங்கை

இலங்கை : நானுஒயா பகுதியில் பேருந்து கவிழந்து விபத்து!

  • February 22, 2024
  • 0 Comments

நானுஓயா ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்தளையில் இருந்து சிவனொளிபாதமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

விரைவில் திறந்த புத்தகப் பரீட்சை!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ ) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வுகளை (ஓபிஇ) செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் திறந்த புத்தகத் தேர்வுகளையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புதிய எரிசக்தி விலை வரம்பு குறித்த கணிப்பு வெளியீடு!

  • February 22, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிய எரிசக்தி விலை வரம்பு கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கணிப்பாளர் கார்ன்வால் இன்சைட் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ள புதிய விலைவரம்பு குறித்த கணிப்புக்களை அறிவித்துள்ளது. கணிப்புகளின்படி ஒரு குடும்பத்தினருக்கான வாழ்க்கைச் செலவு 14 சதவீதத்தால் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் £1,656 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு குடும்பத்திற்கான விலை வரம்பு £1,928 ஆக உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய விலை வரம்பு அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

ஐரோப்பாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் மக்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை

ஐரோப்பாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் உதவும் நபர்களும் குழுக்களும் அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்வதாக அறிக்கை எச்சரித்துள்ளது உதவிப் பணியாளர்கள் நேரடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர், துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் அவர்களின் தொலைபேசி தொடர்புகளை கண்காணிக்க வேண்டும் என்று ஐரோப்பிய கவுன்சில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவிக்கிறது. . குறிப்பாக ஹங்கேரி, கிரீஸ், லிதுவேனியா, இத்தாலி, குரோஷியா மற்றும் போலந்தில் அகதிகளுக்கு உதவி செய்யும் மக்கள் மற்றும் குழுக்களின் மீதான துன்புறுத்தல் […]

இலங்கை

கொழும்பு – கோல்பேஸ் பகுதியில் உள்ள காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

  • February 22, 2024
  • 0 Comments

கோல்பேஸ் அகல காணி ( போராட்டம் நடத்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இடம்) எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பிரதேசத்தை கசினோ வர்த்தகத்திற்கு குத்தகைக்கு விடுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத் தெரிவித்த கருத்து பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22.02) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து […]

ஆசியா

பொது வெளியில் இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்கள்!!

  • February 22, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். அதன் பிறகு அங்கு பெண்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட சிலருக்கு பொது இடத்தில் தலிபான்கள் மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இன்று 2 பேருக்கு தலிபான்கள் பொது இடத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் […]

வட அமெரிக்கா

1.50 லட்சம் மாணவர்களின் கடன் ரத்து: அதிபர் பைடன் வெளியிட்ட அறிவிப்பு!

  • February 22, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 12 ஆயிரம் டொலருக்கும் குறைவாக கடன் பெற்று 10 ஆண்டுகளாக திருப்பிச் செலுத்தி வந்த 1,50,000 மாணவர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், புதிய திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் கடனை ரத்து செய்வதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ‘SAVE’ (பாதுகாப்பு) திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படும் என அறிவித்துள்ள ஜோ பைடன், இத்திட்டத்தின்படி மொத்தம் 1.2 பில்லியன் டொலர் […]

இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • February 22, 2024
  • 0 Comments

மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் புலகத்தில் உள்ளமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த 04 கடைகள் நேற்று (21.02) சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் பெட்டாலிங் ஜெயாவின் இரண்டாவது குறுக்குத் தெருவில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1143 வகையான அழகுசாதனப் பொருட்கள் விசாரணை […]

இலங்கை

தெஹிவளை மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்

  • February 22, 2024
  • 0 Comments

தெஹிவளையில் வேண்டும் என்றே விபத்துக்குள்ளாகி நபரொருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை வீதி பகுதியில் நேற்று காலை 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டரில் பயணித்த நபர் ஒருவர் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இந்த […]