இலங்கை

ஆற்றில் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

லிந்துலை – நாகசேனை பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து இளைஞர்கள் சிலர் லிந்துலை – நாகசேனை பகுதிக்கு சென்று ஆற்றில் நீராடியுள்ளனர். அதன்போது, அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த இளைஞர் சடலமாக […]

பொழுதுபோக்கு

GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப வரும்? ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்

  • February 25, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிற கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், சினேகா, லைலா போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு இப்போது […]

ஆசியா

போலந்தில் ரஷ்ய தூதுவரின் வீட்டில் சாணத்தை கொட்டி போராட்டம்

  உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு எதிர்ப்பாளர்கள் போலந்திற்கான மாஸ்கோவின் தூதரின் வீட்டிற்கு வெளியே சாணக் குவியல் கொட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வார்சாவில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் உரக் குவியலின் மீது “Z” என்ற எழுத்தில் இரத்தம் தோய்ந்த ரஷ்யக் கொடியை வைத்து அதில் “ரஷ்யா = மலம்! நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்களுக்கு வேண்டாம்! வெளியேறு!” என்று ஒரு அடையாளத்தை […]

இலங்கை

”ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025” அறிமுகம் : வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையின் மாணவர்களின் கல்விக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025” அறிமுகப்படுத்தினார். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட புலமைப்பரிசில் முயற்சியானது, நாட்டிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளிலும் தரம் 01 முதல் தரம் 11 வரையான 100,000 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய தரம் 01 முதல் தரம் 11 வரையிலான ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு வருடாந்தம் […]

பொழுதுபோக்கு

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வரும் த்ரிஷா!

  • February 25, 2024
  • 0 Comments

சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வருகிறார் நடிகை த்ரிஷா. தென்னிந்திய திரையுலகில் இருபது வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. நாற்பது வயதை நெருங்கி விட்டாலும் இப்போதும் அவருக்கு மார்கெட் குறையவில்லை. ‘96’ படம் மூலம் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் த்ரிஷா. இது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரம் மூலம் உச்சம் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கடுத்து நடிகர் விஜயுடன் அவர் ஜோடி போட்ட […]

வட அமெரிக்கா

கனடா- அடைக்கலம் கோரி குளிரில் காத்திருந்த ஏதிலிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

  • February 25, 2024
  • 0 Comments

கனடாவில் கடும் குளிரில் காத்திருந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏதிலி முகாமொன்றில் தங்கியிருப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த பெண் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கென்யாவைச் சேர்ந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான டெல்பினா நிகி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிஸ்ஸிசாகாவில் ஏதிலி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக குளிரில் வெளியே காத்திருந்த நிலையில் இவ்வாறு பெண் உயிரிழந்துள்ளார். ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நீண்ட நேரம் குளிர்ந்த காலநிலையில் வெளியே காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீண்ட நேரம் […]

தமிழ்நாடு

லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை

  • February 25, 2024
  • 0 Comments

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1.5 ஆண்டுக்கு முன் லண்டன் நாட்டில் ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில் கடந்த பிப்14 ஆம் திகதி தான் […]

உலகம்

பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் அசாதாரண துர்நாற்றம்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஸ்வீடனின் பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் மர்மமான சம்பவமொன்று இடம்பெற்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசாதாரண துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, 500 பேர் வெளியேற்றப்பட்டனர். இது முதலில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாயு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பாதுகாப்பு சேவைகள் தெரிவித்தன. இந்த எச்சரிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இலங்கை

மட்டக்களப்பு – ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை வீட்டிலேயே விட்டு தப்பிச் சென்ற பெற்றோர்

  • February 25, 2024
  • 0 Comments

தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர். மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் இருந்து தற்காலிகமாக தங்குவதற்கு கலஹாவுக்கு வந்திருந்த இளம் ஜோடியே, சிசுவை கைவிட்டுச்சென்றுள்ளது. இந்த இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு ​பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். […]

ஐரோப்பா

ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மேற்கத்திய நாடுகள் தைரியமாக இருக்க வேண்டும் – ரிஷி சுனக்!

  • February 25, 2024
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான நாட்டின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு அவர்கள் முடக்கிய ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மேற்கத்திய நாடுகள் தைரியமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரிஷி சுனக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த கட்டுரையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், உக்ரைனுக்கு நீண்ட தூர ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் […]

error: Content is protected !!