இலங்கை

ஜெரோம் பெர்னாண்டோவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த பிணை மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, […]

ஆசியா

தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!

  • December 20, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் புதிய துப்பாக்கி உரிமம் வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் இன்று (20.12) அறிவித்தது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், கொடிய துப்பாக்கி சம்பவங்களைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து இராஜ்யத்தில் விவாதம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அக்டோபரில் பாங்காக் ஷாப்பிங் மாலில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஓராண்டுக்கு முன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 36 பேரை சுட்டுக் கொன்றார். இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து துப்பாக்கி […]

ஐரோப்பா

போரிஸ்பில் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு: பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும்- ஜெலென்ஸ்கி

போர்க் காரணங்களுக்காக மூடப்பட்ட போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுளள்து. உக்ரேனிய விமான நிறுவனமான ஸ்கைலைன் எக்ஸ்பிரஸின் வேண்டுகோளின்படி, போயிங் 777-300 விமானத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் கிய்வ்-போரிஸ்பில் விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு செய்யப்பட்டது” என்று விமான நிலையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தை மீண்டும் திறப்பது உக்ரைனுக்கு, குறிப்பாக அதன் பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும் என்று ஜெலென்ஸ்கி […]

தென் அமெரிக்கா

தெற்கு பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • December 20, 2023
  • 0 Comments

தெற்கு பெருவில் இன்று (20.12) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 06 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக   புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 80 கிமீ (50 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

மன்னார் பிரதேசத்தில் 18 ஆயிரம் போதை வில்லைகளுடன் இருவர் கைது

  • December 20, 2023
  • 0 Comments

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதை வில்லைகளுடன் இருவர் புதன்கிழமை (20) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18, ஆயிரம் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி , தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது . கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.அத்துடன் போதை […]

கருத்து & பகுப்பாய்வு

சரியும் பைடனின் புகழ், ட்ரம்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடை : அமெரிக்க மக்களின் நிலைப்பாடு என்ன?

  • December 20, 2023
  • 0 Comments

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைய ஆதரவாளர்களைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2024 ஜனாதிபதித் தேர்தலில் கொலராடோ பிரைமரியில் வாக்களிக்க தகுதியற்றவர் என்று மாநில உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  . கொலராடோ சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் குழு 04 முதல் 03 என முடிவெடுத்துள்ளது, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் இத்தகைய முடிவை வழங்கிய முதல் ஜனாதிபதி வேட்பாளர் ஆவார். இருப்பினும், 2024 […]

ஐரோப்பா

பெர்லினில் மீண்டும் தேர்தல் நடத்த ஜெர்மனி உச்ச நீதிமன்றம் உத்தரவு

தலைநகரில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கடுமையான குளறுபடிகள் இருப்பதால், 2021 தேசியத் தேர்தலை பகுதியளவு மீண்டும் பெர்லினில் நடத்த ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்.டுள்ளது. ஃபெடரல் அரசியலமைப்பு நீதிமன்றம், நகரத்தில் உள்ள 2,256 வட்டாரங்களில் 455 இடங்களில் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் ஜெர்மனியின் அடுத்த தேசிய தேர்தல் 2025 இலையுதிர்காலத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

கிறிஸ்மஸ் மரம் போன்ற தோற்றத்தில் ஒளிர்ந்த நட்சத்திரக்கூட்டம் – நாசா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்!(வீடியோ)

  • December 20, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தைக் கொண்ட நட்சத்திரக்கூட்டங்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிசம்பர் 25ல் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்மஸ் மரம் போன்ற வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் […]

இந்தியா

கர்நாடகாவில் குடி போதையில் மனைவியின் கன்னத்தை கடித்து துப்பிய கணவன்!

  • December 20, 2023
  • 0 Comments

குடிபோதையில் மனைவியின் கண் இமை மற்றும் கன்னச் சதையை கடித்து துப்பிய கணவர், தடுக்க வந்த மகளையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெல்தங்கடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் கவுடா. மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் கவுடா அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்வார் என்று தெரிகிறது. இந்த நிலையில், நேற்று குடிபோதையில் வந்த சுரேஷ் கவுடா, மனைவி, மகளைத் தாக்கினார். அப்போது திடீரென […]

இலங்கை

மட்டக்களப்பில் மாவீரர் தினத்தன்று கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுவிப்பு

  • December 20, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் இன்று பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு ஒங்கமைப்பில் ஈடுபட்டிருந்த நிதர்சன் மற்றும் மாணவனான வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் பயிலும் நியுட்டன் […]

error: Content is protected !!