இலங்கை

ஜெரோம் பெர்னாண்டோவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த பிணை மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​விசாரணை ஜனவரி 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சவேந்திர விக்கிரமவும் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்னவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content