விளையாட்டு

IPL ஏலத்தில் 68 கோடிக்கு வாங்கப்பட்ட 6 ஆஸ்திரேலிய வீரர்கள்

  • December 22, 2023
  • 0 Comments

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்குகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. இதனையடுத்து கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக […]

இலங்கை

கல்முனையில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்து சென்ற இந்தியர்கள்

  • December 22, 2023
  • 0 Comments

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான […]

ஐரோப்பா

தங்கள் உறவுகளை ஸ்பொன்சர் செய்து எடுக்க காத்திருக்கும் பிரித்தானியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

  • December 22, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள், தங்கள் துணையை அல்லது உறவினரை ஸ்பொன்சர் செய்வதற்கான தகுதி வரம்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதன்படி குறைந்தபட்ச வருடாந்திர ஊதியத்தில் உயர்வு ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  தற்போது GBP 18,600ஐப் பெறுபவர்கள், அடுத்த வருடத்தில் (2024) இருந்து 29,000 பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொகை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளவர்லி, திறமையான தொழிலாளர் விசா வழிக்கான குறைந்தபட்ச சம்பளத் […]

மத்திய கிழக்கு

பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் இஸ்ரேலிடம் நிபந்தனை விதித்துள்ள ஹமாஸ் தலைவர்

  • December 22, 2023
  • 0 Comments

பிணைக் கைதிகள் எப்போது விடுவிக்கப்படுவார் என்ற தகவலை ஹமாஸ் தலைவர் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை அக்டோபர் 7ம் திகதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில் இதுவரை 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட புதிய விவாதத்தின் போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் படையினர சரணடையலாம் அல்லது உயிரிழக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

இலங்கை

வவுனியா பாவற்குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!

  • December 22, 2023
  • 0 Comments

வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளார். குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு […]

ஆசியா

பாக். அரசு ரகசியங்களைக் கசிய விட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன்!

  • December 22, 2023
  • 0 Comments

அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசு ரகசியங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே […]

இலங்கை

இலங்கை இந்திய ஒப்பந்தம் ;ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

  • December 22, 2023
  • 0 Comments

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,ஜனாதிபதி மற்றும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் […]

பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவூட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு ; 13 ஆண்டுகள் கழித்து வெடித்த குண்டு

  • December 22, 2023
  • 0 Comments

ஹாலிவூட்டில் பிரபல நடிகராக இருப்பவர் வின் டீசல் (56). பல ஆக்சன் படங்களில் நடித்த இவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ், எக்ஸ் எக்ஸ் எக்ஸ், ஃபாஸ்ட் ஃபைவ், அவெஞ்சர்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஃஹாலிவூட்டில்ஆண்டு ஃபாஸ்ட் ஃபை திரைப்படத்திற்கான செட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த அஸ்டா ஜானஸன் என்பவர் நடிகர்  வின் டீசல் தன்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயற்சித்ததாகக் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் குத்திக்கொலை: தாய் மீது குற்றச்சாட்டு

  • December 22, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் 4 வயது மகன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 4 வயது மகன் கோபி டூலி-மச்சாரியா கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 41 வயதான தாய் கெசியா மச்சாரியா தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளார். புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் ஹாக்னி மாண்டேக் சாலையில் உள்ள முகவரிக்கு அழைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர். அப்போது சிறுவன் கோபி கத்தி குத்து […]

இலங்கை

இலங்கையில் மாயமான சீன பிரஜை!

  • December 22, 2023
  • 0 Comments

பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர் 54 வயதான Zhang Xiaolong என்ற சீன நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமற்போன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

error: Content is protected !!