இலங்கை

பிரித்தானியா செல்ல முயன்ற பிரஜை ஒருவர் கட்டுநாயக்காவில் கைது!

  • December 22, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்ல முற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து  ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 உயிருள்ள தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வது அவசியமானால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இன்று பிற்பகல் 12.55க்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் […]

இலங்கை

முல்லைத்தீவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 170 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

  • December 22, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 170 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பெரண்டினா நிறுவனத்தின் மனிதாபிமான உதவி செயல் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களுக்கும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 06 குடும்பங்களுக்கும் கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 61 குடும்பங்களுக்கும் கருவேலகண்டல் கிராம […]

இலங்கை

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை -ஐயாத்துரை!

  • December 22, 2023
  • 0 Comments

தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் கட்சிகள் சென்று […]

இலங்கை

தேர்தலை கொண்டே ரணில் விக்கிரமசிங்க தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் – கஜேந்திர குமார் பொன்னம்பலம்!

  • December 22, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டுசெல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜனாதிபதியை பாராட்டவேண்டும். ஏனென்றால் சரியான தரப்புகள் யார்,ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்?,ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு […]

வட அமெரிக்கா

7.6 சென்டிமீட்டர் மழைக்கே வெள்ளத்தில் மூழ்கிய கலிபோர்னியா!

  • December 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 7.6 சென்டிமீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையோர பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடற்கரையோர நகரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் 7.6 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்ததால் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு […]

ஆசியா

சீனா, வடகொரியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்பிற்காக மிகப் பெரிய தொகையை ஒதுக்கிய ஜப்பான்!

  • December 22, 2023
  • 0 Comments

சீனா மற்றும் வட கொரியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை ஜப்பான் வெள்ளிக்கிழமை அங்கீகரித்துள்ளது. இதன்படி அடுத்த நிதியாண்டுக்கு  $56 பில்லியன் பாதுகாப்பிற்காக ஜப்பான் ஒதுக்கியுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான 7.95 டிரில்லியன் யென் ($56 பில்லியன்) வரைவு பட்ஜெட், அடுத்த சில ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்களை உயர்த்தும் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் உறுதிமொழிக்கு ஏற்ப அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. சீனாவுடனான வெளிப்படையான பதற்றங்கள், 2027 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேட்டோ தரத்திற்கு […]

உலகம்

ஜமால் கஷோகியின் மனைவிக்கு காலவரையற்ற புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டது!

  • December 22, 2023
  • 0 Comments

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மனைவிக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. ஜமால் கஷோகி அக்டோபர் 2018 இல் இறந்தார், அதன் பிறகு ஹனான் எலத்ர் தனது பாதுகாப்பிற்கு பயந்து ஆகஸ்ட் 2020 இல் அமெரிக்காவிடம் புகலிடம் கோரினார். இந்நிலையில் ஜமால் கஷோக்கியின் மனைவிக்கு  அமெரிக்காவில் காலவரையற்ற புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஹனன் எலத்ர், “நாங்கள் வெற்றி பெற்றோம், ஆம், அவர்கள் ஜமாலின் உயிரைப் பறித்தனர், அவர்கள் என் வாழ்க்கையை […]

உலகம்

செக் குடியரசின் தலைநகர் பிறாகில் துப்பாக்கிச்சூடு : வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

  • December 22, 2023
  • 0 Comments

செக் தலைநகர் பிறாகில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று (22.12) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் வெளிநாட்டினரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், காயமடைந்தவர்களில் இரு சவுதி அரேபிய பிரஜைகளும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது. துப்பாக்கிதாரியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு […]

பொழுதுபோக்கு

முதல் நாள் வசூலில் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கானின் துன்கி!

  • December 22, 2023
  • 0 Comments

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது. இது ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளியான ‘ஜவான்’, ‘பதான்’ படங்களின் முதல் நாள் வசூலை விட குறைவாகும். ஷாருக்கான் நடிப்பில் ‘துன்கி’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் முதல் நாளில் ரூ.30 கோடி மட்டுமே கல்லாக்கட்டியுள்ளது. இது இந்த […]

இலங்கை

புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு : தமிழ் எம்பிகளிடம் ஜனாதிபதி உறுதி!

  • December 22, 2023
  • 0 Comments

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பின்னரே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று கடந்த 21.12.2023 அன்று ஜனாதிபதியின் தலைமையில் அவரது செயலகத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, […]

error: Content is protected !!