இலங்கை : மாத்தறை சிறைக் கைதிகளை பொதுமக்கள் பார்வையிடும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் (24.12) நாளையும் (25.12) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மேற்படி அறிவிப்பினை சிறைச்சாலை சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி, உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், மூளைக் காய்ச்சல் காரணமாக குறித்த […]













