விளையாட்டு

CWC – DLS முறையில் பாகிஸ்தான் வெற்றி

  • November 4, 2023
  • 0 Comments

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார். இதைத் […]

இலங்கை

அடுத்த ஆண்டுக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும்: கல்வி அமைச்சர்

அடுத்த ஆண்டுக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் 4,672 புதிய நியமனங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர், சகல நிதி வசதிகளும் தற்போது பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதல் […]

ஐரோப்பா

சியாரா புயல்: பிரித்தானியாவை கடுமையாகத் தாக்கும் என எச்சரிக்கை

ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் கடுமையான புயலால் பிரித்தானியா பாதிக்கப்படவுள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பிரித்தானியா முழுவதும் புயலின் தாக்கங்கள் இருக்கும் என எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வார இறுதியில் தரைப்பகுதியில் 50-60 மைல் வேகம் வரை காற்று வீசும் எனவும் கடலோரப் பகுதிகளில் 80 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை அலுவலகம் கூறுகின்றது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில […]

இலங்கை

மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட வர்த்தகர் ஷாப்டரின் சடலம்…

  • November 4, 2023
  • 0 Comments

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (04) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் சடலம் கையளிக்கப்பட்டது. பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25ம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.மர்மமாக இருந்த அவரது மரணத்தின் உண்மையை உறுதிப்படுத்துவதற்காக சடலம் […]

இலங்கை

ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 399 யானைகள் உயிரிழப்பு…!

ஒக்டோபர் மாதத்தில் மொத்தம் 399 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை யானைகள் மற்றும் மனித மோதல்கள் காரணமாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இயற்கை காரணங்களுக்காகவும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் விளம்பர அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார். இதன்படி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாஸ் பாவனையால் 39 யானைகளும், விஷவாயு தாக்கி 3 யானைகளும், புகையிரத விபத்தில் […]

மத்திய கிழக்கு

யூதர்களுக்கு ஆபத்து… இஸ்ரேல் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • November 4, 2023
  • 0 Comments

தற்போதைய நெருக்கடியான சூழலில் உலகின் எந்த நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என்று இஸ்ரேல் தனது நாட்டுமக்களை எச்சரித்துள்ளது. ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் நீடித்துவரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி தெரிவிக்கையில், இது உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு ஒரு ஆபத்து தருணம் என்றார். மேலும் உலகளாவிய ரீதியில், உலகெங்கிலும் உள்ள யூத […]

ஐரோப்பா

இத்தாலியில் பெருவெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி; அவசரகால நிலை பிரகடனம்

  • November 4, 2023
  • 0 Comments

இத்தாலி டஸ்கனி நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் 6 பேர் பலியானதை அடுத்து வசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அத்துடன் பெருவெள்ளத்தால் வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து […]

இலங்கை

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு கூட்டம்

  • November 4, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்று (04) மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது, தொழிற்சங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டதையடுத்து புதிய நிர்வாகத் தேர்வும் இடம்பெற்றது.இன்றைய கூட்டத்தில் பின்வரும் கூட்டுறவு […]

இலங்கை

நுவரெலியா செல்வோருக்கான விசேட அறிவிப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவூடான போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைத்தொடர்களின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெவோன் மற்றும் செயின்ட் கிளேர் அருவிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன் பனிமூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுவரெலியா பயணிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் […]

உலகம்

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக ஸ்பெயினின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கேனரி தீவுகளின் மேற்குப் பகுதியில் உள்ள எல் ஹியர்ரோ கடற்பரப்பில் நான்கு படகுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு சடலங்களையும் கண்டுபிடித்துள்ளதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. . மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர் என்று ஸ்பெயின் சிவில் காவலர் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பாற்றப்பட்டவர்களில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]