இலங்கை நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
இலங்கை நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (20.11) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதன்போது பேசிய சபாநாயகர், நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது வேறு வெளியாட்கள் யாரும் கூட்ட அறைக்குள் நுழைய முடியாது என்று குறிப்பிட்டார். குழுத் தலைவர்கள் குழுவில் பணிபுரியும் வரம்பிற்கு அப்பால் செல்வது தொடர்பில் தமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தின் மரபுகளை நீண்டகாலமாகப் பேணிக் காக்கும் வகையில் செயற்படுவதற்கு அனைத்துக் குழுத் தலைவர்களும் நிலையியற் […]













