ஐரோப்பா

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் , பென்டகன் தற்போதுள்ள அமெரிக்க கையிருப்புகளில் இருந்து 100 மில்லியன் டாலர் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளார் , இதில் பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளைத் தோற்கடிப்பதற்கான உக்ரைனின் முயற்சி “உலகின் மற்ற பகுதிகளுக்கு முக்கியமானது” என்றும் அமெரிக்க ஆதரவு “நீண்ட காலத்திற்கு” தொடரும் என்றும் ஆஸ்டின் கூறியுள்ளார்.

விளையாட்டு

இலங்கையில் நடக்க இருந்த U19 உலகக் கோப்பை தொடர் ரத்து

  • November 21, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை […]

உலகம்

அல்பேனியாவுடனான குடியேற்ற ஒப்பந்தம் : இத்தாலி வெளியிட்ட தகவல்

அல்பேனியாவில் புலம்பெயர்ந்தோர் முகாம்களை கட்டும் இத்தாலிய திட்டத்தை, ஒழுங்கற்ற புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் முயற்சியுடன் ஒப்பிட முடியாது என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில், ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான வலதுசாரி அரசாங்கம், ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தோர் வெளியேறுவதைத் தடுக்கவும், நாடு முழுவதும் உள்ள மையங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் அதன் சமீபத்திய முயற்சியாக இந்தத் திட்டத்தை அறிவித்தது. இத்தாலி அல்பேனியாவில் இரண்டு வரவேற்பு மற்றும் தடுப்பு முகாம்களைக் கட்டும், இது எந்த […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை

புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடபடவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று. இன்றைய அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இன்று இடம் பெற்றிருந்தது. […]

இலங்கை

பாடசாலையொன்றில் பாரிய பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வு

வத்தேகம மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பாரிய பக்கச்சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த பக்கச்சுவர் சுவர் இடிந்து விழுந்ததால் பாடசாலை கட்டிட வளாகம் சேதமடைந்துள்ளதா என்றும், எதிர்காலத்தில் என்ன மாதிரியான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரடி கள ஆய்வில் ஈடுபடவுள்ளது. வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மாகாண கல்வி […]

பொழுதுபோக்கு

பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது : பாரதிராஜா!

  • November 21, 2023
  • 0 Comments

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷனின் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. […]

இலங்கை

யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதிகோரி சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!

  • November 21, 2023
  • 0 Comments

வட்டுக்கோட்டையில்  பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணியில்  சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர். குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி அறிவிப்பு!

  • November 21, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரில் உக்ரேனிற்கு இன்னும் நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பீரங்கி வெடிபொருட்கள் உட்பட 1.3 பில்லியன் யூரோக்கள் ($1.4 பில்லியன்) இராணுவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைன் பிரதமர் ருஸ்டெம் உமெரோவுடன்  நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. மேலும் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை […]

உலகம்

நெதர்லாந்து தேர்தல் : கட்சித் தலைவர்கள் விவாதமொன்றில் மோதல்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நெதர்லாந்து கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நாளை பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆரம்ப பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் 2025 இல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குடியேற்றக் கொள்கையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக நான்காவது ரூட்டே அமைச்சரவை 7 ஜூலை 2023 இல் சரிந்ததையடுத்து ஒரு விரைவான தேர்தல் நடத்தப்படவுள்ளது. தற்போதைய பிரதமர் மார்க் ரூட்டே தனது கட்சியை தேர்தலில் வழிநடத்தப் […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் மின்னல் குறித்த எச்சரிக்கை விடுப்பு!

  • November 21, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கம் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21.11) வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை,  பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை […]