பொழுதுபோக்கு

‘தலைவர் 171’-இல் ரஜினிக்கு வில்லனாகும் ஹீரோ…. இவருக்கு இப்படி ஒரு பிளேஸ்பேக் இருக்கா?

  • December 3, 2023
  • 0 Comments

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததக உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை மாபெரும் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை லோகேஷ் தொடங்காவிட்டாலும், அதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் சிவகார்த்திகேயனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க […]

மத்திய கிழக்கு

தெற்கு காசா பகுதியில் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்திய வரும் இஸ்ரேல்!

  • December 3, 2023
  • 0 Comments

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் சந்தேகிக்கின்றது. காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உலகம்

நிலச்சரிவில் சிக்கி உயிரோடு மண்ணில் புதைந்த 7 சுரங்கத் தொழிலாளர்கள்; ஜாம்பியாவில் சோகம்!!

  • December 3, 2023
  • 0 Comments

ஜாம்பியா நாட்டில் தொடர் மழை காரணமாக, தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பதோடு 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் சட்டவிரோதமாக தாமிர சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் நுழைந்து கனிமங்களை எடுத்து வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. ஆபத்தான முறையில் இந்த சுரங்கங்களுக்குள் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதனிடையே ஜாம்பியா நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுரங்கம் அமைந்துள்ள சிங்கோலா […]

இலங்கை

பெருந்தொகையான் பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது: பொலிஸார் தீவிர விசாரணை

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு 12, வாழைத்தோட்டம் , சில்வர் ஸ்மித் லேனைச் சேர்ந்த சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31,750 பாலியல் ஊக்க மருந்து மாத்திரைகளும், 259 பாலின ஊக்கி ஜெல் பாக்கெட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரிடம் நடத்திய […]

மத்திய கிழக்கு

பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிப்பு!

  • December 3, 2023
  • 0 Comments

பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நபர்களைக் கொண்ட மருத்துவக் குழு, கடந்த 7ஆம் திகதியன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் வீடியோக்களில் கடத்தப்பட்டவர்களில் காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகளையும், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் வழங்கும் சாட்சியங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் மேற்படி அறிவித்துள்ளனர்.  குழுவின் தலைவரான சுகாதார அமைச்சின் அதிகாரி ஹகர் மிஸ்ராஹி கூறுகையில்,  பணயக்கைதிகள் இறந்துவிட்டார் என்பதைத் தீர்மானிக்க போதுமானதாக இருக்கும் என்று […]

உலகம்

இஸ்ரேலிய குண்டுவீச்சு : ‘காசாவின் 75% மக்கள்’ உள்நாட்டில் இடம்பெயர்வு

காஸாவின் மக்கள் தொகையில் 75% உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் சனிக்கிழமையன்று வடக்கு காசாவில் இரண்டு சம்பவங்களில் குறைந்தது 160 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனம் (OCHA) தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஆறு மாடி கட்டிடம் மற்றும் காசா நகரின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு முழுத் தொகுதி மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “குண்டுவீச்சு தாக்குதல்ளுக்கு முன்னர், இஸ்ரேலியப் படைகள் இந்தப் பகுதிகளை காலி செய்யும்படி துண்டுப் பிரசுரங்களை கைவிட்டன” என்று  ஐக்கிய நாடுகளின் […]

இந்தியா

தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்!

  • December 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக சத்தீஸ்கர்,  ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா புதிய எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா,  சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில […]

ஐரோப்பா

யேமனுக்கு அருகே உள்ள முக்கிய கப்பல் பாதையில் தாக்குதல்!

  • December 3, 2023
  • 0 Comments

யேமனுக்கு அருகே உள்ள முக்கிய கப்பல் பாதையில் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக பிரித்தானிய இராணுவம்  இன்று (12.03) அறிவித்துள்ளது. அரேபிய தீபகற்பத்தில் இருந்து கிழக்கு ஆபிரிக்காவை பிரிக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தியில் இந்த சம்பவம் நடந்ததாக பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கப்பல் ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஒரு சுருக்கமான எச்சரிக்கையை விடுத்தது. அப்பகுதியில் ட்ரோன் நடவடிக்கையும் பதிவாகியுள்ளதாக UKMTO தெரிவித்துள்ளது. பாப் எல்-மண்டேப் செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. யேமனின் […]

இலங்கை

பில்கேட்ஸுடன் கலந்துரையாடிய இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 இன் போது தொழிலதிபரான பில்கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலப் பகுதியில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இதன்போது விவசாய நவீனமயமாக்கல், தரவுக் கட்டமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவத்துக்காக “Bill & Melinda Gates” மூலம் ஆதரவு வழங்குவதாக பில்கேட்ஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.  

இலங்கை

இலங்கை : மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்: உறவினர்கள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்கு நீதிபெற்றுத்தரவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்; பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சானந் எனும் 14வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது […]

error: Content is protected !!